சமீபகாலமாகவே சின்னத்திரை சீரியலில் நடிக்கும் நடிகர்களின் வீட்டில் பல சுப காரியங்கள் நடந்து வருகிறது. அதிலும் ரசிகர்களும், நெட்டிசன்களும் பிரபலங்களின் வீட்டில் ஏதாவது ஒரு நிகழ்ச்சி குறித்து விஷயம் தெரிந்தால் போதும் சோசியல் மீடியாவில் அதை பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி விடுகிறார்கள். அந்த வகையில் தற்போது நாயகி சீரியல் நடிகை பிரதிபாவுக்கு திருமணம் நடந்து உள்ளது.
சன் டிவியில் 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற தொடர் நாயகி. இந்த சீரியல் 2020 ஆம் ஆண்டு முடிவடைந்தது. இருந்தாலும் இன்றும் இந்த சீரியலுக்கு என ஒரு தனி ரசிகர் படை உள்ளது. அந்த அளவிற்கு இந்த சீரியல் சன் டிவியில் பிரபலமானது. மேலும்., நாயகி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த பல நடிகர்கள் கொரோனா காலம் காரணத்தினால் மாற்றினார்கள். அதனால் வேறு நடிகர்களை மாற்றம் செய்தார்கள்.
இதையும் பாருங்க : என் மகனின் ஜாதி சான்றிதழில் இப்படி தான் இருக்கிறது – பொது மேடையில் போட்டுடைத்த எஸ் ஏ சி. வைரலாகும் வீடியோ.
இருந்தாலும் இந்த சீரியல் பயங்கர ஹிட் கொடுத்தது என்று சொல்லலாம். இந்நிலையில் இந்த சீரியலில் கதாநாயகனுக்கு தங்கையாக அனு என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடிகை பிரதீபா. இவர் நாயகி தொடரில் தனது வில்லத்தனத்தை வெளிப்படுத்தியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில் இன்று இவருக்கு சென்னையில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் தான் காதலித்த காதலனை திருமணம் செய்துள்ளார்.
மேலும், இவர்களுடைய திருமணம் குடும்பத்தினர் மத்தியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தற்போது தங்கள் திருமணத்தில் எடுத்துள்ள புகைப்படத்தை நடிகை பிரதீபா அவர்கள் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த நாயகி சீரியல் ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை குவித்த வண்ணம் வருகின்றனர்.