தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் முன்னணி திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா. தற்போது தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் என்றால் அது நயன்தாரா தான். இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிப்பதோடு வசூல் ரீதியாகவும் கலக்ஷனை அல்லி விடுகிறது. இதனாலேயே இவரை வைத்து படம் எடுக்க பல்வேறு இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் போட்டி போட்டு கொண்டிருக்கின்றனர்.
இறுதியாக நடிகை நயன்தாரா ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் நடித்து இருந்தார். இதை தொடர்ந்து தமிழில் ‘நெற்றிக்கண்’ , ‘அண்ணாத்த’ போன்ற படங்களில் நடித்து வரும் நயன்தாரா. அதே போல தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். அதே போல சமந்தாவும் நடித்து வருகிறார்.
கடந்த 2்015்ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் விஜய்சேதுபதி மற்றும் நயன்தாரா நடித்து வெளியான ‘நானும் ரவுடி தான்’ திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்த நிலையில்தான் ‘காதுவாக்குல ரெண்டு காதல்’ படம் கடந்த டிசம்பர் மாதம் பூஜையுடன் தொடங்கியது. முதல் நாளில் நடிகர் விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன.
வீடியோவில் 2 : 20 நிமிடத்தில் பார்க்கவும்
இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் போது சமந்தாவால் நயன்தாரா கடுப்பானதாக பிரபல சினிமா சினிமா விமர்சகர்களான வலைப்பேச்சு கூறியுள்ளனர். அதாவது, காத்துவாக்குல இரண்டு காதல் படப்பிடிப்பின் போது நடிகை சமந்தா நடித்து முடித்தவுடன் பாட்டில் இருந்தவர்கள் அனைவருமே கைதட்டி பாராட்டி இருந்தார்கள் உடனே நயன்தாரா சைலன்ட் ஏன் இவ்வளவு சத்தம் போடுறீங்க என்று கூறியதாக கூறியுள்ளனர். மேலும், இப்படி எல்லாம் நடக்கும் என்று தான் ஆரம்பத்தில் சமந்தா இந்த படத்தில் நடிக்க தயங்கினார்களா என்றும் கூறியுள்ளனர்.