லெஜண்டில் அண்ணாச்சிக்கு ஜோடியாக நடிக்க மறுத்ததால் முக்கிய அந்ததஸ்தை இழந்த நயன்தாரா. என்ன தெரியுமா ?

0
555
- Advertisement -

லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடிக்க மறுத்ததால் நயன்தாரா முக்கிய அந்தஸ்தை இழந்து தவிக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தனது சொந்தக் கடையின் விளம்பரத்தில் தானே நடித்து பிரபலம் தேடிக்கொண்டவர் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி. பேஸ்டு பேஸ்டு பேஸ்டு என்று அணைத்து தொலைக்காட்சிகளிலும் தனது பேஸ்டு விளம்பரத்தில் கலர் கலரான ஆடைகளை அணிந்து கொண்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான ஸ்னேகா துவங்கி தற்போது இருக்கும் ஹன்சிகா வரை அனைவருடனும் இணைந்து விளம்பரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர்.

-விளம்பரம்-

மேலும், தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் இல்லாத இடமே இல்லை. ஜவுளி முதல் வீட்டு உபயோக சாதனம் வரை பல கடைகளை வைத்திருக்கும் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி தற்போது சினிமாவிலும் களம் இறங்கி இருக்கிறார். தற்போது சரவணன் அருள் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் தி லெஜண்ட். இந்த படத்தை ஜேடி – ஜெரி இணைந்து இயக்கி இருக்கிறார்கள். சரவணன் அருள் கதாநாயகனாக இந்த படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் அருள் அண்ணாச்சிக்கு ஜோடியாக புதுமுகம் கீத்திகா திவாரி நடித்து இருக்கிறார்.

- Advertisement -

தி லெஜண்ட் படம்:

இவர்களுடன் இந்தப் படத்தில் ஊர்வசி ரவ்துலா, பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், மயில்சாமி, லதா, கோவை சரளா, தேவி மகேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. மேலும், படத்தில் வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராகவும், எடிட்டராக ரூபனும் பணிபுரிந்து இருக்கிறார்கள். இந்த படம் அஜித், விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுக்கு இணையாக அதிக அளவிலான தியேட்டர்களில் வெளியாகி இருந்தது.

ஊர்வசி ரவ்துலா வாங்கிய சம்பளம்:

இந்த படம் 5 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டிருக்கிறது. படம் வெளியான முதல் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்தில் பலமான டெக்னிக்கல் டீம், அனுபவம் வாய்ந்த நடிகர்கள் இருந்தாலும் கதை கவரும் வகையில் இல்லை என விமர்சனங்கள் எழுந்தது. ரஜினியே இந்த படத்தில் நடித்திருந்தாலும் ஓடி இருக்காது என்றெல்லாம் கூறி வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தில் சரவணன் அருளுக்கு ஜோடியாக நடித்தவர் பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் ஊர்வசி ரவ்துலா.

-விளம்பரம்-

அண்ணாச்சிக்கு ஜோடியாக நடிக்க இருந்த நடிகை:

இவருக்கு லெஜெண்ட் சரவணன் கொடுக்கப்பட்ட சம்பளம் தான் தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அவர் இந்த படத்தில் நடிக்க 20 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார். கோலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா கூட இதுவரை இந்த அளவிற்கு சம்பளம் வாங்கியதில்லை. அதுமட்டுமில்லாமல் இந்த படம் ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் சரவணனுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை தான் முதலில் அணுகி இருந்தார்கள். ஆனால், அவரோ எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் அவருடன் நடிக்க மாட்டேன் என்று கறாராக கூறிவிட்டாராம்.

நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய ஊர்வசி ரவ்துலா:

இதனையடுத்து தான் பாலிவுட்டில் இருந்து ஊர்வசி ரவ்துலாவை அண்ணாச்சி களமிறக்கி இருந்தார். இதனால் இவருக்கு 20 கோடி சம்பளம் கொடுப்பட்டது. கோலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை என்ற அந்தஸ்தை ஊர்வசி ரவ்துலா பெற்று இருக்கிறார். இதற்கு முன் கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்கிற அந்தஸ்துடன் நடிகை நயன்தாரா தான் இருந்தார். தற்போது அவரை பின்னுக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். இதற்கு காரணம் அண்ணாச்சிக்கு ஜோடியாக நடிக்க மறுத்ததே என கூறப்படுகிறது. தற்போது நயன்தாரா ஒரு படத்தில் நடிக்க அதிகபட்சமாக 10 கோடி சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement