மத்தவன் Produce பண்ணா ஒரு நியாயம் நீங்க Produce பண்ணா ஒரு நியாயமா ? நயன்தாராவின் செயலால் கடுப்பான ரசிகர்கள்.

0
5567
- Advertisement -

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் அஜித் தான் பொது நிகழ்ச்சிகளிலும் தனது படத்தின் பிரமோஷனில் கலந்து கொள்வதை எப்போதும் நிறுத்திவிட்டார் தற்போது நடிகைகளில் நயன்தாரா அதே ரூட்டை பின்பற்றி வருகிறார்.தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் முன்னணி நடிகைகளில் டாப் இடத்தில் இருப்பவர் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமாவில் அதிக கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகளிலும் நயன்தாரா தான் முதல் இடம்.

-விளம்பரம்-

நடிகை நயன்தாரா டாப் ஹீரோக்களுடன் நடிப்பது மட்டுமல்லாமல் லீடு ரோல்களிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். மேலும், இவர் லீடு ரோலில் நடித்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் தான். அஜித்தை போல நயன்தாரா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்சகளில் கலந்துகொள்வது இல்லை என்றாலும் விருது நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்துகொள்வார்.

இதையும் பாருங்க : பிகினி உடையில் கண்ணாடி முன்பு எடுத்த செல்பி வீடியோவை வெளியிட்ட கோமாளி பட நடிகை.

- Advertisement -

நடிகையாக மட்டுமல்லாமல் நயந்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து rowdy pictures என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இப்படி ஒரு நிலையில் இவரது தயாரிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் நெற்றிக்கண் படத்தின் ப்ரோமஷன் நிகழ்ச்சி ஒன்றில் நயன்தாரா கலந்து கொண்டு இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

இதை பார்த்த ரசிகர்கள் பலர் தான் தயாரிக்கும் படங்களின் ப்ரோமஷனுக்கு மட்டும் கலந்து கொள்ளும் நயன் அடுத்தவவர்கள் தயாரிக்கும் படங்களின் ப்ரோமஷனில் ஏன் கலந்துகொள்வது இல்லை என்று கேள்வி எழுப்பி, தன் படம் என்றால் ஒரு நியாயம் அடுத்தவர் தயாரித்தால் ஒரு ஞாயமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். நயன்தாரா ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் ஏன் பங்குபெறுவது இல்லை என்பது குறித்து தயாரிப்பாளர் சிவா பேட்டி ஒன்றில் கூறிய போது,

-விளம்பரம்-

நயன்தாரா அக்ரீமென்ட் போடும் போதே என்னுடைய ப்ரைவேசி மற்றும் பாதுகாப்பு காரணத்திற்காக நான் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வர மாட்டேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார். அதை ஒப்புக்கொண்டு தான் அவரை ஒப்பந்தம் செய்கிறார்கள்.அதே போல நயன்தாரா ப்ரோமோஷனுக்கு வந்து தான் அது நயன்தாராவின் படம் என்று தெரிய வேண்டும் என்று அவசியம் இல்லை. நயன்தாரா என்ற அந்த பெயர் ஒன்று போதும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கத்து.

Advertisement