சென்னையின் மெயினான இடத்தில் செயல்படாமல் இருக்கும் தியேட்டரை வாங்கும் நயன் – பக்காவான பிளான்

0
5028
nayan
- Advertisement -

நடிகை நயன்தாரா சொந்தமாக திரையரங்கம் வாங்கி இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு வருகிறார். சமீப காலமாக இவர் கதாநாயகிகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அதனால் நாட்கள் செல்ல செல்ல இவருடைய ரசிகர்கள் கூட்டமும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

-விளம்பரம்-

மேலும், நயன் நடிப்பில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல், O2, காட்ஃபாதர்,கோல்ட் படம் எல்லாம் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இதை தொடர்ந்து கடைசியாக நயன் நடிப்பில் வெளியான படம் கனெக்ட். இந்த படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்து இருந்தார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது நயன் அவர்கள் ஜவான் திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் அட்லி இயக்குகிறார்.

- Advertisement -

நயன் திரைப்பயணம்:

ஷாருக்கான் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். நயன் நடிக்கும் படங்கள்: இதுதான் நயன்தாராவின் முதல் இந்தி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டும் இல்லாமல் சில திரைப்படங்களிலும் நயன்தாரா கமிட்டாகி நடித்து வருகிறார். இதனிடையே அனைவரும் எதிர்பார்த்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி வெகு விமர்சையாக நடந்தது. திருமணத்திற்கு பின் இருவரும் தங்களுடைய கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இப்படி கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக நயன் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக ஜொலித்துக் கொண்டிருக்கின்றார். அதுமட்டுமில்லாமல் தென்னிந்திய சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக நயன் திகழ்கிறார். இவர் சினிமாவில் மட்டும் இல்லாமல் பிற தொழிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில்இவர் லிப் பாம் கம்பெனியை துவங்கியிருக்கிறார். தற்போது அழகு சாதன பொருட்கள் வரிசையில் இந்த நிறுவனம் மிகப் பிரபலமான நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது.

-விளம்பரம்-

பின் பிரபலமான chai wala என்ற நிறுவனத்திலும் நயன்தாரா பெரும் முதலீடு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை நயன் திரையரங்கம் வாங்கி இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, சென்னையில் மிகவும் பிரபலமாக இருந்த திரையரங்களில் ஒன்று அகஸ்தியா திரையரங்கம். இந்த திரையரங்கம் சில வருடமாகவே மூடப்பட்டிருக்கிறது. இதனால் அந்த பகுதியில் மல்டிபிளக்ஸ் திரையரங்கே இல்லை.

புதிய தியேட்டர் :

தற்போது அந்த அகஸ்தியா திரையரங்கை தான் நயன்தாரா வாங்கி இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும், அந்த தியேட்டர் இருந்த இடத்தில் புதிதாக இரண்டு தியேட்டர்களை கட்டவும் நயன்தாரா முடிவு செய்து இருக்கிறார். அடுத்த வருடம் நயன்தாரா கட்டும் புது தியேட்டர் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து பலரும் நயன்தாராவுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இதற்கு முன்பு சிவாஜி கணேசன், நாகேஷ், ஜெயப்பிரதா போன்ற பல நடிகர்கள் சொந்தமாக திரையரங்கங்களை வாங்கி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement