TRPல் டாப்பில் இருக்கும் சீரியலில் இப்படி ஒரு சொதப்பலா ? இத கவனிசீங்களா ? – எதிர் நீச்சல் சீரியலை கலாய்க்கும் நெட்டிசன்கள்

0
757
- Advertisement -

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நிலையில் அதில் ஏற்பட்டுள்ள சொதப்பலை ரசிகர் ஒருவர் ஆதாரத்துடன் நிரூபித்திருப்பது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தை கொண்ட கதை. இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தொடக்கத்தில் இந்த தொடருக்கு பல எதிர்புகள் எழுந்தது. ஆனால், சமீப காலமாக இந்த தொடரில் பல பெண் புரட்சி வசனங்கள் இடம்பெற்று வருவதால் இந்த தொடருக்கு இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

-விளம்பரம்-

ரசிகர்களை ஈர்க்கும் எதிர்நீச்சல் :

இதனால் டி ஆர் பியிலும் முன்னணியில் இருக்கிறது இந்த சீரியல். மேலும் மற்ற சீரியல்களின் ப்ரோமோக்களை பார்க்கும் ரசிகர்கள் கூட இந்த ப்ரோமோக்களையும் கேட்டு வருகின்றனர். அந்த அளவிற்கு இந்த சீரியல் ரசிர்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளது. இந்த நிலையில் வாரத்தில் இறுதியில் கிராமம் முதல் நகரம் வரை எல்லா இடங்களிலும் சீரியலை எந்த அளவிற்க்கு பார்க்கின்றனர் என்பதை அளவிட டி ஆர் பி எடுக்கப்பட்டு வெளியாகும்.

- Advertisement -

பல திருப்பங்களுடன் கதை :

ஒவ்வொரு வாரமும் புது புது திருப்பங்கள் நடந்து வரும் நிலையில் தற்போது பட்டம்மாள் அப்பத்தாவின் சொந்த ஊரில் உள்ள வீட்டிற்கு மருமகள்கள் சென்று விட்டனர். சக்தியும் மனம் மாறி ஜனனிக்கு ஆதரவாக வீட்டின் தலைவரான குணசேகரனை எதிர்த்து பேச தொங்கி உள்ளார். அதோடு கரிகாலன் கட்டிய வீட்டை பார்த்து குடும்பமே ஆடிப்போயிருக்கும் நிலையில் ஆதிரை காதலிக்கும் விஷியமும் கரிகாலனுக்கு தெரிய வருகிறது.

டி ஆர் பியில் முன்னிலை :

இப்படி பல திருப்பங்கள் நடப்பதினால் ரசிகர்களின் ஆதரதர்ப்பது வு இந்த சீரியலுக்கு மிகவும் அதிகரித்துள்ளது. விவரங்களின் அடிப்படையிலும் டி ஆர் பி விவரங்களின் பார்த்தல் எதிர்நீச்சல் சீரியல் 9.48 டி ஆர் பி அளவை பெற்றிருக்கிறது. இது கடந்த வாரத்தை விட அதிகமாகும். கடந்த வாரம் 9.09 பெற்று ஆறாவது இடத்தில் இருந்தது எதிர்நீச்சல் சீரியல். ஆனால் தற்போது நல்ல அளவில் முன்னேறி இருக்கிறது.

-விளம்பரம்-

சீரியல் சொதப்பல்கள் :

இந்த நிலையில் தற்போது சிரியலின் கதை மதுரையில் நடப்பதாகத்தான் எதிர் நீச்சல் சீரியலை இயக்குனர் திருட்செல்வம் எடுத்து வருகிறார். தற்போது பொங்கல் என்பதினால் மருமகள்கள், குழந்தைகள், என அனைவரும் மதுரை அருகே உள்ள சோழவந்தனின் உள்ள அப்பத்தா பட்டம்மாள் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருக்கின்றனர். இதில் குறை என்னவென்றால் அந்த விடியோவில் காருக்குள் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகளில் வெளியில் செல்லும் வண்டிகளின் போர்டு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.

கலாய்க்கும் நெட்டிசன்கள் :

அதாவது மதுரையில் இருந்து சோழவந்தான் கிளம்புப்பதாக சொல்லப்படும் இவர்கள் காருக்குள் வெளியில் வரும் வண்டிகளை பார்த்தல் பாண்டிச்சேரி மற்றும் ஈ சி ஆர் போர்டு போட்ட வண்டிகளாக வருகின்றனர். இதனை அறிந்த நெட்டிசன்கள் எல்லாவற்றையும் செய்து “மன்டையில் இருந்த கொண்டய மறந்து விடீர்களே” என்று கலாய்த்து வருகின்றனர். இருந்தாலும் இப்படி சின்ன சின்ன விஷியங்களை பார்த்தல் கதையா பார்க்க முடியாது என்று அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர் எதிர் நீச்சல் சீரியல் ரசிகர்கள்.

Advertisement