புடவை எல்லாம் நியூஸ் வாசிக்கும் போது மட்டும் தான் – கண்மணியின் இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா ?

0
19689
kanmani
- Advertisement -

சமீப காலமாகவே வெள்ளித்திரையில் இருக்கும் நடிகைகளுக்கு நிகராக தொலைக்காட்சித் தொகுப்பாளினிக்கும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. தொலைக்காட்சி பொறுத்த வரை எப்போதும் ஒரு சில தொகுப்பாளனிகளுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கும். பெப்சி உமா, டிடி என்று சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வகையில் தற்போது சன் டிவி செய்தி வாசிப்பாளராக கலக்கி கொண்டு இருப்பவர் கண்மணி. தூர்தர்ஷன் செய்திகளுக்குப் பிறகு சன் டிவி செய்திகளுக்குத் தான் மக்கள் மத்தியில் மவுசு அதிகம் இருந்தது. பல ஆண்டு காலமாக சன் டிவியில் நியூஸ் ஒளிபரப்பப்படுகிறது.

-விளம்பரம்-

அதிலும் சமீப காலமாக செய்தி வாசிக்கும் செய்தி வாசிப்பாளர்க்கு என்று ஒரு தனி ரசிகர் படை சேருகிறது. அதில் நியூஸ் ரீடர் அனிதா சம்பத் அவர்கள் தன்னுடைய வசீகரமான அழகளாலும், குரலாலும் செய்தி வாசிப்பாளராக சன் டிவியில் செய்திகள் வசித்து வந்தார். இவர் நியூஸ் வாசிக்க தொடங்கியதில் இருந்து இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை நாங்கள் சொல்ல வேண்டியது இல்லை.

இதையும் பாருங்க : இவர் தான் விபத்தில் உயிரிழந்த தோனியின் முதல் காதலியா ? வெளியான தெளிவான புகைப்படம்.

- Advertisement -

அந்த பிரபலத்தின் மூலம் தான் இவருக்கு பிக் பாஸில் பங்குபெறும் வாய்ப்பும் கிடைத்தது. இவரை போலவே பிரியா பவானி சங்கர், சரண்யா, திவ்யா துரைசாமி என்று பலர் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் நடிகையாக வலம் வந்தனர். தற்போது அனிதா சம்பத், பிரியா பவானி சங்கர் வரிசையில் அடுத்தபடியாக இளசுகள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார் மற்றொரு செய்தி வாசிப்பாளர்.

அந்த செய்தி வாசிப்பாளரின் பெயர் கண்மணி. தற்போது கண்மணி செய்தி வாசிப்பின் மூலம் தனெக்கென ஒரு இளைஞர்கள் கூட்டத்தை சேர்த்தவர் கண்மணி. இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை தேடி பல இளசுகள் அலைந்து கொண்டு இருக்கும் நிலையில் இவர் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இவரை புடவையில் மட்டும் பார்த்த ரசிகர்கள் இவரை மாடர்ன் உடையில் பார்த்து மெய் மறந்துள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement