சினிமாவில் நீடிக்க திறமை மட்டுமல்ல அதுவும் வேனும் – நிதி அகர்வால் சர்ச்சை கருத்து

0
393
nidhi
- Advertisement -

சினிமாவில் நீடிக்க திறமை மட்டுமில்லை அழகும், கிளாமரும் வேண்டும் என்று சிம்பு பட நடிகை நிதி அகர்வால் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்பவர் நிதி அகர்வால். இவர் திரைப் பட நடிகை மட்டும இல்லாமல் டான்சர், மாடலும் ஆவார். இவர் ஹிந்தியில் “முன்னா மைக்கேல்” என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமானார்.

-விளம்பரம்-
nidhi

அதன் பின்னர் இவர் தெலுங்கு மொழியில் “சவ்யாசாச்சி”, “மிஸ்டர் மஞ்சு” போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். ஆனால், இந்த படங்கள் எல்லாம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அதுவும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கும் இந்த படம் வசூல் கூட பெறவில்லை. இதை தொடர்ந்து தெலுங்கில் வெளியான ஸ்மார்ட் ஷங்கர் படத்தில் நடித்தார் நிதி அகர்வால். தொடர் தோல்விகளை சந்தித்து வந்த இயக்குநர் பூரி ஜெகன்நாத், நிதி அகர்வாலுக்கும் இந்த படம் மிகப் பெரிய பூஸ்ட் அப் ஆக அமைந்தது.

- Advertisement -

நிதி அகர்வால் திரைப்பயணம்:

இதனை தொடர்ந்து நிதி அகர்வால் அவர்கள் தமிழில் காலடி தடம் பதித்து இருந்தார். இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அதே போல சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்திலும் நிதி அகர்வால் நடித்து இருந்தார். ஆனால், இந்த இரண்டு படங்களுமே இவருக்கு எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை. இருப்பினும் அம்மணி தெலுங்கில் மவுசு குறையாமல் தான் இருந்து வருகிறார்.

நிதி அகர்வால் நடிக்கும் படங்கள்:

தற்போது இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி போன்ற பிற மொழியிலும் பிசியாக படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மகிழ்திருமேனி இணைந்த படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சினிமா துறை குறித்து நடிகை நிதி அகர்வால் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி வருகிறது. அதாவது, சமீபத்தில் நடிகை நிதி அகர்வால் பேட்டி ஒன்று அளித்திருந்தார்.

-விளம்பரம்-

நிதி அகர்வால் அளித்த பேட்டி:

அதில் அவர், தற்போது சினிமா துறையில் நீடித்து இருக்க திறமை மட்டும் போதாது. அழகும் வேண்டும், கிளாமரும் வேண்டும். திறமையை கண்டு வாய்ப்பு கொடுப்பவர்கள் இங்கு மிகக் குறைவு. தற்போது எல்லாம் படங்களில் கிளாமராக காட்சியளிப்பது தான் ஹீரோயின்களின் வேலையாகவே இருக்கிறது. பார்வையாளர்களும் கிளாமர் திரைப்படங்களை தான் பார்ப்பதற்கு திரையரங்களில் குவிக்கிறார்கள். அதனால் தான் கிளாமர் ஷோ பண்ண நான் தயங்குவதில்லை. எந்த ஒரு இயக்குனரும் பெரிய ஹீரோ படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்தால் நான் சம்பளம் கேட்க மாட்டேன்.

சினிமா துறை குறித்து சொன்னது:

அவர்கள் எவ்வளவு கொடுக்கிறார்களோ அதை நான் வாங்கிக் கொள்வேன். இல்லை என்றால் இது தான் எனது குறைந்தபட்ச சம்பளத்தொகை என்று கூறிவிடுவேன். ஏனென்றால், பெரிய ஹீரோக்களுடன் நடித்தால் பிற படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கும் என்று எனக்கு தெரியும். அதனால் நான் சம்பளம் குறித்து பெரிதாக பேசுவதில்லை என்று கூறியிருக்கிறார். இப்படி இவர் அளித்திருக்கும் பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பி வருகிறது.

Advertisement