கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சுட்டு சாஃப்ட்வேர் கம்பெனியில வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். கன்னட சேனல்ல ஒரு ரியாலிட்டி ஷோவுல எங்க ஃபேமிலி கலந்துக்கிட்டது. அந்த ஷோவுல என்னைப் பார்த்துட்டு, 'ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ தொடருக்கு நடிக்கக் கேட்டாங்க. குண்டா இருக்கிற ஒரு பொண்ணு வேணும்னு ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்தாங்களாம்!" என்றவர், ''என்னோட ’குண்டு’ மேட்டர் பத்திப் பேசிடலாமா?" எனச் சிரித்தபடியே தொடர்ந்தார்...
ஆனா, முதல்முறையா என்னைக் குண்டா படைச்ச கடவுளுக்கு தேங்க்ஸ் சொல்லி, சந்தோஷப்பட்டது இந்த சீரியல் வாய்ப்பு கிடைச்ச நிமிடம்தான். எங்க வீட்டுலகூட காமெடி பண்ணி இன்னும் அசிங்கப்படுத்திடுவாங்களோனு பயந்தாங்க. சீரியல் கதையைக் கேட்டதும், ஃபன் இருந்தாலும், சீரியஸான சப்ஜெக்ட்னு புரிஞ்சது. என்னை மாதிரி ஒரு ஆள் கிடைக்கிறதுக்காக இந்த சீரியல் டீம் மெனக்கெட்டு அலைஞ்சதையும், ரொம்ப நாளா காத்திருந்ததையும் நினைச்சப்போ, இன்னொரு விஷயத்தையும் புரிஞ்சுகிட்டேன். அது என்னனா, தமிழ் மக்களோட சீரியல் பிரியத்துக்கு இந்தமாதிரி மெனக்கெடல்கள்தான் காரணம்னு எனக்குத் தோணுது.
எப்படியோ... நானும் தமிழ் சீரியலுக்குள்ள வந்துட்டேன். ஏற்கெனவே எங்க ஊர்ல இருந்து வந்த ரச்சிதா, சைத்ரா போல என்னையும் உங்க ஊருல ராஜகுமாரியா ஏத்துப்பீங்களா?’ என்ற அஷ்வினி, ''இந்த சீரியல் கதை மாதிரியே நிஜத்துலேயும் ’எனக்குக் கல்யாணம் நடக்குமா’னு சொந்த பந்தங்கள்ல பலபேருக்குக் கவலை இருந்துச்சு. ஆனா, அதெல்லாம் கடந்த காலம். ஏன்னா, எனக்காகப் பிறந்த ராஜகுமாரன் இப்போ என்னோடதான் இருக்கார். எனக்கு மேரேஜ் ஆகிடுச்சுங்க!’ எனச் சிரிக்கிறார்.
அஷ்வினியின் அந்த ராஜகுமாரனின் பெயர், மிதுன். பெங்களூரில் ஐ.டி துறையில் பணிபுரிகிறார். 'சாஃப்ட்வேர் பணியிலிருந்தபோது ’லவ்’வா என்றால், வெட்கச் சிரிப்பைப் பதிலாகத் தருகிறார், அஷ்வினி.




