சினிமா துறையில் இருப்பவர் அனைவருக்குமே மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடிக்க வேண்டும் என ஆசை இருக்கும். அனைவர்க்கும் அது நடந்துவிடாது. ஆனால் ஒரு சில நடிகர்களுக்கு அப்படி ஒரு ரசிகர் கூட்டம் படிப்படியாக உருவாகும். சிவாஜி, M.G.R, ரஜினி, கமல், விஜய் அஜித் என்று இவர்களுக்கு தான் தமிழ் சினிமாவில் ரசிகர் கூட்டம் அதிகம் என சொல்லலாம்.
ஆனால் இப்போது இவர்களுக்கு மாறாக, ரஜினிக்கு இணையாக ஓவியாவின் புகழ் உயர்ந்துவிட்டது என சொல்லலாம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட பிறகு அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவாகிவிட்டது. அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டால் அவருக்கான ரசிகர்கள் குறையவில்லைல்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு நேற்று முதல் முறையாக அவர் tweet செய்தார். அந்த ட்விட்டர் பதிவுக்கு 24 மணி நேரத்திற்குள் 44 ஆயிரம் லைக்குகளும், 13 ஆயிரம் ரிடுவீட்டுகளும், 7700 கமெண்ட்டுகளும் இதுவரை கிடைத்துள்ளன.
இதற்கு சரியான உதாரணம் நேற்று நடந்திருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் நேற்று முதல் முறையாக ஓவியா டுவிட்டரில் வந்து ஒரு பதிவைப் போட்டார். அந்தப் பதிவிற்கு 24 மணி நேரத்திற்குள்ளாக 43 ஆயிரம் லைக்குகளும், 13 ஆயிரம் ரிடுவீட்டுகளும், 7900 கமெண்ட்டுகளும் இதுவரை கிடைத்துள்ளன.
At a loss for words, to describe the love ? & care from each one of you.. I feel blessed, thankful & to be more responsible for all ur love
— Oviyaa (@OviyaaSweetz) August 28, 2017
அதே போல் 2.0 படத்தின் மேக்கிங் வீடியோவை ரஜினிகாந்த தனது ட்விட்டர் பக்கத்தில் tweet செய்தார். அதற்க்கு அவருக்கு 28 ஆயிரம் லைக்குகளும், 8.8 ஆயிரம் ரிடுவீட்டுகளும், 2200 கமெண்ட்டுகளும் இதுவரை கிடைத்துள்ளன.
— Rajinikanth (@superstarrajini) August 25, 2017
இந்நிகழ்வு சமூக வலைத்தளங்களில் ஓவியாவின் புகழ் மற்றும் ரசிகர்களின் ஆதரவு தெளிவாக தெரிகிறது.