‘என்ன கருமம்டா இது’ – ரஞ்சித்தின் 12 வருட பழைய ட்வீட். தற்போது விமர்சிக்கும் ரசிகர்கள். ஏன் பாருங்க.

0
934
ranjith
- Advertisement -

பொதுவாகவே தமிழ் சினிமாவில் காலம் காலமாக ஜாதிக்கு எதிரான கருத்துக்கள் கொண்ட படங்கள் வெளிவந்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில் நிஜத்திற்கு நெருக்கமான அரசியல் சினிமா படத்தை தன்னுடைய திரைப்படங்கள் மூலம் புதிய விவாதங்களை உருவாக்குபவர் இயக்குனர் பா ரஞ்சித். தற்போது இவர் தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்கிறார். 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியை வைத்து வட சென்னையை கதைக்களமாக கொண்டு மெட்ராஸ் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. அதனை தொடர்ந்து இவர் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா போன்ற படங்களை இயக்கி இருந்தார். இவ்விரு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகி இருந்த சார்பட்டா பரம்பரை படமும் ரசிகர்கள் மத்தியில் அமோக வெற்றியை பெற்றது.

- Advertisement -

பா ரஞ்சித் திரை பயணம்:

மேலும், இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் பல படங்களை தயாரித்தும் இருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த ரைட்டர் படத்தை இவர் தான் தயாரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி உள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்தது. இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராமன் கதாநாயகனாக நடித்து உள்ளார். அவருக்கு ஜோடியாக சார்பட்டா பரம்பரை புகழ் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

நட்சத்திரம் நகர்கிறது படம் பற்றிய தகவல்:

தென்மா தான் இந்த படத்துக்கு இசை அமைத்துள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் கலையரசன், அரிகிருஷ்ணன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை நீலம் புரோடக்சன் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. சாண்டி மாஸ்டர் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து பா ரஞ்சித் அவர்கள் கமலை வைத்து படம் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் சில படங்களை பா ரஞ்சித் கமிட் பண்ணி இருக்கிறார்.

-விளம்பரம்-

ரஞ்சித்தின் பழைய டீவ்ட்:

இப்படி ஒரு நிலையில் ரஞ்சித்தின் பழைய டீவ்ட் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அப்படி என்ன அந்த ட்விட்டரில் அவர் பதிவிட்டு இருக்கிறார் என்றால், எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு. அட்டக்கத்தி படம் நிறைய பேருக்கு பிடிச்சிருக்கு. ரொம்ப நன்றி என்று சொல்லிவிட்டு ‘என் இரு முலைக் காம்புகளை மறைக்க சிறிதளவு துணியை போதும். உன் கர்வத்தை அடக்க என் ஒரு காம்பே போதும்’ என்று பதிவிட்டு இருந்தார். தற்போது இந்த ட்விட்டை நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

விமர்சித்து வரும் நெட்டிசன்கள்:

மேலும், இதை பார்த்து பலரும் பலவிதமாக விமர்சித்து கிண்டல் கேலி செய்து கமெண்டுகளை போட்டுவருகிறார்கள். அதிலும் சிலர் தாறுமாறாக பா. ரஞ்சித் ட்விட்டை வறுத்து எடுத்து வருகிறார்கள். இன்னும் சிலர் வைரமுத்துவே மேல் போல என்று ஒப்பிட்டு கூறியிருக்கிறார்கள். இப்படி இவரின் டீவ்ட் சோஷியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு ரஞ்சித் தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement