அம்பேத்கார் படத்த வச்சி, ப்ளூ சட்டையெல்லாம் மாட்டிவிட்டு அந்த வசனத்தை பேசி தான் ஆக வேண்டும் என்று சொன்னேன் – பா ரஞ்சித்.

0
481
Paranjith
- Advertisement -

தமிழில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இய்குணராக அறிமுகமானவர் இயக்குனர் ரஞ்சித். அந்த திரைப்படம் இளஞ்சர்கள் மத்தியில் ஒரு ஜாலியான படமாக பார்க்கப்ட்டது. அதன் பின்னர் இவர் கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை இயக்கி இருந்தார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் ஹிட் அடித்தது. தொடர்ந்து இரண்டு படங்களின் வெற்றியால் தனது மூன்றாவது படத்தில் இவருக்கு ரஜினியை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

-விளம்பரம்-

கபாலி, காலா என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கி மாஸ் காட்டி வந்தார்.இயக்குனராக மட்டுமலல்லாமல் இவர் நீலம் ப்ரோடேஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இறுதியாக ரஜினியின் காலா படத்தை இயக்கி இருந்த் ரஞ்சித், சமீபத்தில் ஆர்யாவை வைத்து சார்பட்டா படத்தை இயக்கி இருந்தார்.ரஞ்சித் ஜாதிப் படங்களை மட்டும் தான் எடுப்பார் என்று விமர்சனம் வைத்தவர்களுக்கு இந்த படத்தின் மூலம் பதிலடி கொடுத்தார் ரஞ்சித்.

- Advertisement -

ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது :

இதை தொடர்ந்து நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி இருந்தார் ரஞ்சித். இந்த படத்தில் இந்த படத்தில் காளிதாஸ், கலையரசன், துஷாரா விஜயன், அசோக் செல்வன் உட்பட பல நடிகர்கள்நடித்திருந்தனர். இசையமைப்பாளர் டென்மா இந்த படத்திற்கு இசை அமைத்திருந்தார். படத்தில் காதலுக்கு பாலின வேதங்கள், ஜாதி மதங்கள், எல்லாம் கிடையாது என்பதை அழகாக காண்பித்திறந்தார்

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரஞ்சித், தான் இயக்கிய முதல் படமான ‘மெட்ராஸ்’ படத்தின் போது கார்த்தியுடன் ஏற்பட்ட சின்ன பிரச்சனை கூறியுள்ளார். அதில் படத்தின் கிளைமஸ்ஸில் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் காட்சியில் ‘கல்வி மட்டும் இல்லாமல் பகுத்தறிவு கல்வியை படிக்க வேண்டும்’ என்ற வசனம் பேச யோசித்தார். ஆனால், இறுதியில் பிடிவாதம் பிடித்து நான் அவரை அந்த வசனத்தை பேச வைத்தேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

அட்டகத்தி பட பிரச்சனை :

ஏற்கனவே அட்டகத்தி படத்தில் போதும் பா ரஞ்சித்துக்கு பிரச்சனை எழுந்து இருக்கிறது. இதுகுறித்து பேசிய அவர் ‘அட்டகத்தி படத்தை எடுத்து முடித்த போது அந்த படத்தை பார்த்த பலர் தயாரிப்பாளரை கொஞ்சம் குழப்பிவிட்டார்கள்.அந்த படத்தை எடுத்த போது யாரும் இப்படி ஒரு படத்தை எடுக்க வேண்டாம் என்று சொன்னார்கள். மேலும், இந்த படத்தை வெளியிட வேண்டாம் என்று அந்த படத்தின் தயாரிப்பாளரை குழப்பிவிட்டார்கள்.

ரஞ்சித் – விக்ரம் படம் :

அவர் எனக்கு மெசேஜ் செய்தார், நீ என்னை ஏமாற்றிட்ட, உன் கொள்கைக்காக என் பணத்தை பயன்படுத்திகிட்ட, நான் எல்லாத்தையும் இழந்துட்டேன் என்று பயங்கரமாக திட்டினார். ஆனால், ஸ்டுடியோ கிறீன் படத்தை பார்த்த பின்னர் எல்லாம் மாறிவிட்டது என்று பேசி இருந்தார். தற்போது ரஞ்சித் விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இந்த படம் Kgf படத்தை மிஞ்சும் அளவு எடுக்கப்பட இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

Advertisement