Prank ஷோ முதல் பிரசாந்த் படம் வரை – இயக்குனர் ஆகும் முன் ரஞ்சித் என்னவெல்லாம் செஞ்சிருக்கார் பாருங்க. இதோ அறிய வீடியோ.

0
696
paranjith
- Advertisement -

தமிழில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இய்குணராக அறிமுகமானவர் இயக்குனர் ரஞ்சித். அந்த திரைப்படம் இளஞ்சர்கள் மத்தியில் ஒரு ஜாலியான படமாக பார்க்கப்ட்டது. அதன் பின்னர் இவர் கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை இயக்கி இருந்தார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் ஹிட் அடித்தது. தொடர்ந்து இரண்டு படங்களின் வெற்றியால் தனது மூன்றாவது படத்தில் இவருக்கு ரஜினியை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

-விளம்பரம்-

கபாலி, காலா என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கி மாஸ் காட்டி வந்தார். காலா படத்திற்கு பின்னர் இவருக்கு பாலிவூட்டிலும் அழைப்பு வந்தது. இயக்குனராக மட்டுமலல்லாமல் இவர் நீலம் ப்ரோடேஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவரது தயாரிப்பில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றறிந்த்து.

- Advertisement -

ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன் :

அதன் பின்னர் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர், சேத்துமான் போன்ற பல படங்களை தயாரித்து இருக்கிறார் ரஞ்சித். இந்த படங்கள் எல்லாமே விமர்சங்கங்கள் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. ரஞ்சித் இறுதியாக ஆர்யாவை வைத்து சார்பட்ட பரம்பரை படத்தை இயக்கி இருந்தார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Prank ஷோ :

தற்போது ரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி இருக்கிறார், இதை தொடர்ந்து விக்ரமை வைத்து இயக்க இருக்கிறார் ரஞ்சித். சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் இவர் பல வேலைகளை செய்து இருக்கிறார்.அந்த வகையில் இவர் Prank ஷோ கூட செய்து இருக்கிறார். பிக் பாஸ் போட்டியளரான அர்ச்சனா பல ஆண்டுகளுக்கு முன்னர் கலந்து கொண்ட ஒரு பேட்டி ஒன்றில் அர்ச்சனாவை, பா ரஞ்சித் பிராங்க் செய்துள்ளளார்.

-விளம்பரம்-

சென்னை 28 படத்தில் ரஞ்சித் :

அந்த வீடியோவில், அர்ச்சனாவை ஒரு படத்திற்காக நடிக்க அழைக்கும் ரஞ்சித், அர்ச்சனாவை ஒரு நாளைக்கு 100 ரூபாய் போதுமா உங்களுக்கு என்று படு பங்கமாக கலாய்த்துள்ளார். அதே போல இவர் ஆரம்ப காலத்தில் வெங்கட் பிரபுவின் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். மேலும், இவர் வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 படத்தில் ஒரு சிறிய காட்சியில் தலை காண்பித்து இருப்பார்.

பிரசாந்தின் தகப்பன்சாமி படம் :

ஆனால், அதற்கு முன்பாகவே பிரசாந்த் படத்தில் வசனம் பேசி நடித்து இருக்கிறார். ஆம், 2006 ஆம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் வெளியான ‘தகப்பன் சாமி’ படத்தில் ரஞ்சித் ஒரு சிறிய காட்சியில் தோன்றி இருப்பார். அந்த படத்தின் ஒரு காட்சியில் ராஜஸ்தானில் நடக்கும் ஒரு ஒட்டக போட்டியில் மேடையில் இந்தியில் வசனம் பேசி நடித்து இருக்கிறார் ரஞ்சித். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement