உன் கொள்கைய காட்ட என் பணத்த யூஸ் பண்ணிட்டனு திட்டி மெசேஜ் அனுப்பினார் – பா ரஞ்சித் சந்தித்துள்ள பிரச்சனை.

0
53939
- Advertisement -

தமிழில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இய்குணராக அறிமுகமானவர் இயக்குனர் ரஞ்சித். அந்த திரைப்படம் இளஞ்சர்கள் மத்தியில் ஒரு ஜாலியான படமாக பார்க்கப்ட்டது. அதன் பின்னர் இவர் கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை இயக்கி இருந்தார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் ஹிட் அடித்தது. தொடர்ந்து இரண்டு படங்களின் வெற்றியால் தனது மூன்றாவது படத்தில் இவருக்கு ரஜினியை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

வீடியோவில் 23 நிமிடத்தில் பார்க்கவும்

-விளம்பரம்-

கபாலி, காலா என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கி மாஸ் காட்டி வந்தார்.இயக்குனராக மட்டுமலல்லாமல் இவர் நீலம் ப்ரோடேஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இறுதியாக ரஜினியின் காலா படத்தை இயக்கி இருந்த் ரஞ்சித், சமீபத்தில் ஆர்யாவை வைத்து சார்பட்டா படத்தை இயக்கி இருந்தார்.

இதையும் பாருங்க : எஸ் ஜே சூர்யாவா தான எதிர் பார்த்தீங்க – அவரயே தூக்கி சாப்பிடும் வில்லன் வந்துட்டாரு – அதிகாரபூர்வ அறிவிப்பு.

- Advertisement -

ரஞ்சித் ஜாதிப் படங்களை மட்டும் தான் எடுப்பார் என்று விமர்சனம் வைத்தவர்களுக்கு இந்த படத்தின் மூலம் பதிலடி கொடுத்தார் ரஞ்சித், இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரஞ்சித், தான் இயக்கிய முதல் படமான ‘அட்டகத்தி’ படத்தின் போது சந்தித்த பிரச்சனை குறித்து கூறியுள்ளார். அட்டகத்தி படத்தை எடுத்து முடித்த போது அந்த படத்தை பார்த்த பலர் தயாரிப்பாளரை கொஞ்சம் குழப்பிவிட்டார்கள்.

அந்த படத்தை எடுத்த போது யாரும் இப்படி ஒரு படத்தை எடுக்க வேண்டாம் என்று சொன்னார்கள். மேலும், இந்த படத்தை வெளியிட வேண்டாம் என்று அந்த படத்தின் தயாரிப்பாளரை குழப்பிவிட்டார்கள். அவர் எனக்கு மெசேஜ் செய்தார், நீ என்னை ஏமாற்றிட்ட, உன் கொள்கைக்காக என் பணத்தை பயன்படுத்திகிட்ட, நான் எல்லாத்தையும் இழந்துட்டேன் என்று பயங்கரமாக திட்டினார். ஆனால், ஸ்டுடியோ கிறீன் படத்தை பார்த்த பின்னர் எல்லாம் மாறிவிட்டது.

-விளம்பரம்-
Advertisement