கடந்த 2001 ஆம் ஆண்டு சேரன் இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் ஷமிதா மல்னாட் நடிப்பில் வெளிவந்த படம் பாண்டவர் பூமி. இந்த படத்தில் வீடு கட்ட இஞ்சினியராக வரும் அருன் விஜயுடன் நட்பு ரீதியாக காதலில் விழுந்துவிடுவார் ஷமிதா.
அதனால் ‘தோழா தோழா தோல் கொடு கொஞ்சம் சாஞ்சுக்கனும்’ என ஒரு நட்பு கலந்த ஒரு காதல் பாட்டு இவர் பாடுவது போன்று வரும் இந்த பாடலின் மூலம் அப்போது பிரபலமானார் ஷமிதா.
அதன் பின்னர் மழையில் முளைத்த காளான் போன்று தமிழ் திரைப்படங்கள் அவரை காணமுடியவில்லை. பல கன்னட படங்களில் நடித்து வந்த ஷமிதா, பல வருடங்களுக்குப் பிறகு தமிழில் சிவசக்தி என்ற சீரியலில் நடித்தார். பின்னர் அந்த சீரியலில் தன்னுடன் நடித்த
ஶ்ரீகுமாரை திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார் ஷமிதா. தற்போது விஜய் டீவி உட்பட பல டீவிகளின் சீரியல்களில் நடித்து வருகிறார் ஷமிதா. மேலும், நல்ல படங்கள் இல்லை எனினும் நல்ல கணவர் அமைந்துவிட்டார் என உற்சாகமாக சீரியல்களில்நடித்து வருகிறார்.