தமிழகத்தில் இலுமினாட்டி குறித்து பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருபவர் பாரி சாலன். மேலும், பல்வேறு அரசியல் வாதிகளும் இந்த இலுமினாட்டக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று பலமுறை கூறி கைது செய்யப்படும் இருக்கிறார். சமீபத்தில் தர்பார் குறித்து சர்ச்சையான விஷயத்தை பேசி சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தார். இந்த நிலையில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மாஸ்டர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்து சர்ச்சையான விஷயத்தை பதிவிட்டு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் பாரி சாலன்.
சமீப காலமாகவே இளையதளபதி விஜயின் படங்கள் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது அதிலும் இறுதியாக இவரது நடிப்பில் வெளியான சர்க்கார் மற்றும்பிகில் திரைப்படங்கள் கதைத்திருட்டு விவகாரத்தில் சிக்கியது. இளைய தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக அட்லி இயக்கத்தில் வெளியான பிகில் திரைப்படம் 300 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்தது. பிகில் படத்தை தொடர்ந்து மாநகரம், கைதி போன்ற வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது விஜய் தனது 64 வது படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் இன்று மாலை 5.00 மணிக்கு வெளியாகும் என பட குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் இந்த படத்திற்கு ‘ மாஸ்டர்’என்று தலைப்பை வைத்துள்ளனர். இந்த படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிப்பதால் இந்த தலைப்பை வைத்துள்ளனர் என்று அனைவரும் நினைத்து வந்த நிலையில், பாரி சாலன் வேறு சர்ச்சையை பதிவிட்டுள்ளார். அதில், டெவில் ஹார்ன் கை கையொப்பம் மற்றும் மேசோனிக் பிரமிட் குறியீடுகள். தமிழக மக்களுக்கு ஏதேனும் நடந்தால், இந்த நடிகர்களுக்கும் அதில் ஒரு பங்கு இருக்கும்.
தமிழ்நாட்டை நெருப்பால் அழிக்க ஒரு திட்டம் உள்ளது. எரிவாயு குழாய் இணைப்புகள் மற்றும் மீத்தேன் பிரித்தெடுத்தல், மற்றும் அணு உலைகள் போன்ற திட்டங்கள் . இவை எதுவுமே தீ மூலம் பெரும் அழிவை ஏற்படுத்தும். திரு.விஜய் அவர்களே பிடியில் இருந்து வெளியேற முயற்சி செய்யுங்கள் அல்லது மைக்கேல் ஜாக்சனைப் போல உங்கள் கதை முடிவடையும். பல இளைஞர்கள் உங்களை நேசிக்கிறார்கள், நீங்கள்அவர்கள் குடும்பத்தினரைக் கொல்லத் திட்டமிடுபவர்களின் கைகளில் இருப்பதை அவர்கள் உணர்ந்தால் அவர்கள் தொடர்ந்து அவ்வாறு செய்ய மாட்டார்கள். அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேற முயற்சி செய்யுங்கள்.