தங்கமயிலால் பாண்டியன் வீட்டில் நடக்கும் கலவரம், குஷியில் ராஜி, மீனா- விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

0
456
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் கடந்த வாரம் பாண்டியன் சரவணன்-தங்கமயில் ஜோடியை ஹனிமூன் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்து இருந்தார். அப்போது, சரியாக கவனிக்காமல் ஆன்லைன் மூலம் தங்கமயில் ரூம்மை அதிக ரேட்டுக்கு புக் செய்து இருந்தார். ஓட்டலுக்கு சென்ற பின் தான் சரவணனுக்கு, ரூம்மின் மொத்த செலவு 26000 என்று தெரிந்தது. இதை சரவணன், கதிர்-செந்தில் இடம் சொல்லி இருந்தார். செந்தில், மீனாவிடம் பணம் கேட்க, அவர் கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டார்.

-விளம்பரம்-

கடைசியில் கதிர், பாண்டியனுக்கு தெரியாமல் அவர் மொபைல் போனில் இருந்து பணத்தை எடுத்து விட்டார். அதோடு கல்லாவில் இருந்தும் ₹1000 எடுத்து இருந்தார். அடுத்த நாள் கோமதியின் சின்ன அண்ணன் மகனை பார்க்க, பெண் வீட்டில் இருந்து வந்திருந்தார்கள். அப்போது ராஜி அம்மா கழுத்தில் மட்டும் நகை இல்லை. இதனால் வீட்டில் சண்டை வெடித்தது. இதை அறிந்த ராஜி வருத்தப்பட்டு அழுந்தார். பின் பாண்டியன் வீட்டில் கடை கணக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது கணக்கில் ஒரு ₹1000 விடுகிறது என்று சொல்ல பாண்டியன் அதிர்ச்சி ஆகி, உன் மகன் இன்னக்கி கடைக்கு வந்திருந்தான்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

அவன் வேலையாக தான் இருக்கும் வர சொல்லு என்று சொன்னவுடன் கதிர் வந்து நான் எடுக்கவில்லை என்கிறார். கடைசியில் செந்தில், ஒருவர் குறைவாகத்தான் பணம் கொடுத்தார். அதை நான் மறந்து விட்டேன் என்று பொய் சொல்லி சமாளிக்க, பாண்டியனும் நம்பி விடுகிறார். அந்த சமயம் பார்த்து பாண்டியன் மொபைலுக்கு தங்கமயில், தாங்கள் எடுத்த போட்டோக்களை அனுப்பி இருந்தார். அதை பார்த்து ஆச்சரியப்பட்டும், தங்கமயிலை பற்றி பெருமையாகவும் பாண்டியன் பேசி இருந்தார்.
இன்னொரு பக்கம் தங்க மயிலின் அம்மா போன் செய்து, மாப்பிள்ளையை உன் வழிக்கு கொண்டு வா, நான் சொல்வதைப் போல் செய் என்று தேவையில்லாத வேலை பார்க்கிறார்.

சீரியல் கதை:

தங்கமயிலும், தன் அம்மா சொன்னது போலவே சரவணனிடம் சண்டை போட்டு வெளியே வந்து விடுகிறார். சரவணனும் என்ன செய்வது என்று புரியாமல் தூங்கி விடுகிறார். மறுநாள் தங்கமயில், தன்னுடைய அம்மாவிடம் போன் செய்து நடந்ததை சொல்ல, நீ விட்டுப் விட்டுப் புடி என்று மீண்டும் அவருக்கு தவறாக சொல்லிக் கொடுக்கிறார். பின் எடுத்த போட்டோக்களை எல்லோருக்கும் அனுப்பி, வீடியோ கால் செய்து பேசி இருந்தார் தங்கமயில். அப்போது ஏன்? என்னுடைய போட்டோவிற்கு யாருமே எந்த ரிப்ளையும் பண்ணவில்லை என்று வருத்தப்பட்டு பேச எல்லோருமே அவருக்கு மெசேஜ் அனுப்பினார்கள்.

-விளம்பரம்-

நேற்று எபிசோட்:

தன்னுடைய மாமனார் அனுப்பிய மெசேஜை கேட்டு தங்கமயில் ரொம்ப சந்தோஷப்படுகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில், பாண்டியன் மெசேஜ் அனுப்பியதை நினைத்து சமையல் அறையில் கோமதி புலம்பிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வந்த பாண்டியனிடம் கோபமாகவே கோமதி பேசியிருக்கிறார். உடனே பாண்டியன், தங்க மயிலுக்கு மெசேஜ் போட்டு விடு. பாவம் அந்த பிள்ளை என்று சொன்னவுடன் இன்னும் கோமதிக்கு கோபம் அதிகமாகிறது. பின் வெளியில் வந்த பாண்டியன், வீடியோ கால் செய்து கோமதியை சமாதானம் செய்கிறார். கோமதியும் பாண்டியன் பேச்சால் உருகி அன்பாக பேசுகிறார்.

இன்றைய எபிசோட்:

இதையெல்லாம் ராஜீ- மீனா இருவருமே பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை கவனித்த கோமதி வெட்கப்படுகிறார். இன்னொரு பக்கம் சரவணன்- தங்கமயில் இருவருமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சரவணனின் பிறந்தநாளுக்கு தங்கமயில், புது ஷர்ட் வாங்கி தந்திருக்கிறார். அந்த சட்டையில் வெயிட்டர் சட்னி ஊத்தி விடுகிறார். இதனால் கோபமாக தங்கமயில் கத்துகிறார். இருந்தாலும் சமாளித்து சரவணன், தங்கமயிலை கூட்டிக்கொண்டு வந்து விடுகிறார். சரவணன் இதை தன்னுடைய அப்பாவிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement