கோமதி செய்த வேலையால் வீட்டில் வெடித்த பூகம்பம், பாண்டியன் சொன்ன வார்த்தை- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

0
201
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் அப்பத்தாவுக்கு நெஞ்சு வலி வந்ததால் ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணார்கள். இதை அறிந்த ராஜி- கோமதி இருவருமே வேதனைப்பட்டு அழுதார்கள். பின் கோமதி தன்னுடைய அம்மாவிற்காக சமைத்து பழனியிடம் கொடுக்கும்போது பாண்டியன் வாங்கி பார்த்து விட்டார். வேறு வழியில்லாமல் கோமதி உண்மையை சொல்ல, பாண்டியன் எதுவும் சொல்லாமல் கொடுத்து விடு என்றார். அப்பத்தாவும் அதை வாங்கி சாப்பிட்டு சந்தோஷத்தில் தன் மகளை புகழ்ந்து தள்ளி இருந்தார்.

-விளம்பரம்-

பின் தன் அம்மாவை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று சொல்ல, மகன்கள் எல்லோரும் சேர்ந்து திட்டம் போட்டார்கள். இந்த வாரம் ஹாஸ்பிடலுக்கு கோமதி- ராஜி இருவருமே போனார்கள். தன் அம்மாவை பார்த்து கோமதி ஆனந்தத்தில் அழுது புலம்பி இருந்தார். ஆனால், ராஜி பேசியும் அவருடைய அம்மா முகம் கொடுத்து கூட பேசவில்லை. கோமதி, தன்னுடைய அம்மாவிடம் மனம் விட்டு பேசி இருந்தார். ஆனால், இந்த விஷயம் பாண்டியனுக்கு தெரியாது. இன்னொரு பக்கம் பழனியின் அண்ணன்கள் ஹாஸ்பிடலுக்கு கிளம்ப பார்த்தார்கள்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

உடனே பழனி, கதிரிடம் இந்த உண்மையை சொல்ல, கதிரும் அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்தார். பின் பாண்டியனிடம், தன் அம்மாவிற்காக கோவிலுக்கு போனதாக கோமதி சொல்ல, அவர் எதுவும் பேசாமல் அமைதியாகி விட்டார். நேற்று எபிசோட்டில் கோமதியின் அண்ணன்கள் ஹாஸ்பிடலுக்கு சென்று பார்த்தார்கள். அங்கு சாப்பாடு கேரியரை பார்த்து யார் வந்தார்கள்? என்று கேட்டதற்கு, என்னுடைய அண்ணி வந்தார் என்று வடிவு சமாளித்தார். ஆனால், அதில் கோமதி என்று பெயரை பார்த்த அவருடைய அண்ணன்கள் பயங்கரமாக கத்தி பேசி இருந்தார்கள்.

நேற்று எபிசோட்:

உடனே அவர்கள், கோமதி தான் சாப்பாட்டை எடுத்து வந்தார் என்று சொல்ல இருவருமே மாறி மாறி கத்த, இதனால் நெஞ்சு வலி வந்தது போல மீண்டும் அப்பத்தா நடித்தார். உடனே டாக்டர் எல்லோரையும் திட்டி அனுப்பி விட்டார். இன்னொரு பக்கம் வீட்டில் கோமதி, தன் அம்மாவை பார்த்த சந்தோஷத்தில் இருந்தார். அதற்கு பின் வீட்டிற்கு வந்த கோமதியின் அண்ணன்கள், பாண்டியன் வீட்டு வாசலில் கத்தி, ரொம்ப கேவலமாக பேசி இருந்தார்கள். அந்த சமயம் வந்த பாண்டியன், அவரும் திருப்பி திட்டுகிறார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இதையெல்லாம் உள்ளே இருந்து கேட்ட கோமதி அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். இந்நிலையில் இன்றைய எபிசோடில், கோமதியின் அண்ணன்கள் பயங்கரமாக கத்தி கலவரம் செய்து கொண்டிருக்கிறார்கள். பாண்டியனுக்கு ஒன்றுமே புரியவில்லை. உடனே கதிர், ஆமாம் அப்பத்தாவை பார்க்க போனது உண்மைதான் என்று சொல்ல பாண்டியன் டென்ஷன் ஆகிறார். இதுதான் சந்தர்ப்பம் என்று மீண்டும் கோமதி அண்ணன்கள் பேசுகிறார்கள. பின் மயக்கம் தெளிந்த கோமதி வெளியே வந்து எதுவும் பேச முடியாமல் இருக்கிறார். பாண்டியன், அவர்கள் உங்களுக்கு மட்டும் அம்மா இல்லை. கோமதிக்கும்தான் அம்மா.

சீரியல் ட்ராக்:

அவர்களை ஹாஸ்பிடல் தான் பார்த்தார். அது பொது இடம் என்று கோமதிக்கு ஆறுதலாக பேசியவுடன் மொத்த குடும்பமே ஷாக் ஆகின்றது. கோமதி அண்ணன்களும் எதுவும் பேச முடியாமல் வாய் அடைத்து சென்று விட்டார்கள். பின் கோமதி தன்னுடைய கணவனிடம் மன்னிப்பு கேட்டு, தனக்கு துணையாக நின்று பேசியதற்கு நன்றி சொல்லி இருந்தார். அதோடு பாண்டியன், கதிர் செய்தது நல்ல வேலை என்று சொல்லி இருந்தார். அதற்குப்பின் எல்லோருமே சந்தோஷமாக பேசிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், தன்னை யாரும் கண்டு கொள்ளவில்லை என்று தங்கமயில் ரொம்பவே வருத்தப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement