கதிர் செய்த வேலையால் கோபப்படும் கோமதி, பாசத்திற்கு ஏங்கும் மீனா – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

0
164
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் செந்தில்- சரவணன் இருவருமே கதிர் கடத்தியதாக சொன்ன பெண்ணை அழைத்துக் கொண்டு கதிர் எந்த தவறும் செய்யவில்லை என்று நிரூபித்து இருந்தார்கள். பின் பாண்டியன் தன்னுடைய மகனை, ராஜியின் அப்பா வீட்டிற்கு அழைத்து சென்று தான் விட்ட சவாலில் வெற்றி பெற்றதை சொல்லி பெருமையாக பேசி இருந்தார். இதனால் ராஜி அப்பா, சித்தப்பாவால் எதுவுமே பேச முடியாமல் அமைதியாக இருந்தார்கள்.

-விளம்பரம்-

அதற்கு பின் எல்லோருமே கதிரை விசாரித்து அக்கரையாக பேசி இருந்தார்கள். பின் பாண்டியன், எல்லா வேலையும் அப்படியே நிற்கிறது. லீவு போட்டால் எப்படி நடக்கும்? எல்லோரும் அவரவர்கள் வேலையை பாருங்கள் என்று திட்டி அனுப்பி விட்டார். இன்னொரு பக்கம் கதிருக்கு உடம்பு முழுவதும் அடிபட்டு இருப்பதை பார்த்த ராஜு ரொம்ப வருத்தப்பட்டார். அந்த சமயம் வந்த கோமதியும், கதிர் நிலையை பார்த்து கதறி அழுதார். பின் தன்னுடைய மகனுக்கு ஆறுதல் சொல்லி ஒத்தடம் போட்டார். மறுநாள் சோசியல் மீடியா, டிவி என அனைத்திலும் கதிர் செய்த சாகசம் குறித்த செய்தி தான் வைரலாகி இருந்தது.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இதை பார்த்து மொத்த குடும்பமே சந்தோஷப்பட்டு பேசிக் கொண்டிருந்தார்கள். நேற்று எபிசோட்டில் கதிர் செய்த சாதனையை பெருமையாக நினைத்து ராஜி, தன்னுடைய அப்பாத்தாவிடம் சொல்ல, அவர் வீட்டு வாசலில் கத்திக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து வந்த ராஜி சித்தப்பா, வழக்கம் போல் பாண்டியன் குடும்பத்தை மோசமாக பேசி இருந்தார். அதற்கு ராஜி பதிலடி கொடுத்து வந்தார். அதன் பின் அப்பத்தா, கதிர் செய்த சாகச வீடியோவை டிவியில் போட்டு பார்த்தார். அதன் பின் எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கும் போது பாண்டியன், கதிரை பார்த்து ரொம்ப வருத்தப்பட்டு அழுதார்.

நேற்று எபிசோட்:

அவர் சென்றவுடன் கதிர் தன்னுடைய அப்பா வருத்தப்பட்டதை நினைத்து பீல் பண்ணி இருந்தார். பின் குழலி, கதிரை பார்த்து பயங்கர எமோஷனலாக பேசி இருந்தார். அந்த சமயம் பார்த்து தங்கமயிலின் அப்பா, அம்மாவும் வந்தார்கள். அவர்களை வேண்டும் என்று குழலி வம்பு இழுத்து இருந்தார். பின் அவர், தன் தம்பிக்காக மட்டன் குழம்பு, இட்லியை பரிமாறி இருந்தார். உடனே தங்கமயில் அம்மா, நாட்டுக்கோழி குழம்பை தம்பிக்கு வை என்று சொன்னவுடன், கோழி எல்லாம் யாராவது தின்னுவாங்களா? ஓரமா போங்க என்று நக்கலாக குழலி பேச, அவர்களுடைய முகமே மாறி இருந்தது.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தங்கமயில் அம்மாவின் முகம் வாடியதால் செந்தில், கோழிக்கறி குழம்பு கொடுங்கள் என்று வாங்கி சாப்பிடுகிறார். சரவணன் மட்டும் எனக்கு மட்டன் குழம்பு போதும் என்றவுடன் தங்கமயில் முகம் மாறுகிறது. இதையெல்லாம் கவனித்த மீனா, செந்தில் இடம் கேட்கிறார். அதற்கு செந்தில், அவர்கள் மனது கஷ்டப்படும் என்று சொல்ல, செந்திலை பாராட்டியிருந்தார் மீனா. இன்னொரு பக்கம் கதிர், கல்லூரிக்கு செல்வதாக சொல்கிறார். இதனால் கோபப்பட்ட ராஜி, கோமதியிடம் சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

உடனே கோமதி, வீட்டில் ரெஸ்ட் எடு, வேலைக்கெல்லாம் போக வேண்டாம் என்கிறார். ஆனால், கதிர் கேட்கவே இல்லை. இன்னொரு பக்கம் மீனா வேலை செய்யும் இடத்திற்கு அவருடைய அம்மா வருகிறார். அப்போது அவர், கதிர் விஷயத்தைப் பற்றி கேட்க, மீனா நடந்ததை சொல்கிறார். பின் இருவரும் சந்தோசமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். பின் வீட்டில் சமைத்த சாப்பாட்டை தன்னுடைய அம்மாவிற்கு பரிமாறுகிறார். இதை வீடியோ கால் மூலம் கோமதி இடமும் காண்பிக்க, அவர் சந்தோசப்படுகிறார். பின் மீனாவின் அம்மா கிளம்பியவுடன் அவர், வருத்தப்பட்டு பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement