விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாண்டியனை வீட்டிற்கு அழைத்து வந்தார்கள். அவரின் நிலையை பார்த்தவுடன் மொத்த குடும்பமும் கதறி அழுதது. கோமதி, நான் தான் ஒழுங்காக அரசியை பார்த்துக் கொள்ளவில்லை. என் மீது தான் தவறு. என்னை மன்னித்து விடுங்கள் என்று தன் கணவரிடம் ரொம்ப எமோஷனலாக பேசி அழுதார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே தங்களுடைய வேலைகளை செய்தார்கள். பாண்டியனின் மகன்கள, தன்னுடைய அப்பாவின் நிலைமையை நினைத்து வருத்தப்பட்டார்கள்.
இன்னொரு பக்கம் ராஜியின் அப்பா வீட்டில் எல்லோருமே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது அரசி-குமார் காதலை பற்றி பேசும்போது அப்பத்தா, கோமதி நிலைமை நினைக்கு ரொம்ப கவலையாக இருக்கிறது என்று புலம்பி இருந்தார். உடனே முத்துவேல், அரசி பக்கம் இருக்கும் நியாயத்தை மட்டும் பேசாதே. நம் மகனின் நிலைமையும் யோசித்துப் பார். குமார் மீது எந்த தவறும் இல்லை என்று சப்போர்ட்டாக பேசினார். அதற்குப்பின் தங்கமயில் பாண்டியனுக்கு டீ போட்டு கொண்டு வந்து கொடுக்க, அரசி அப்பா என்று கூப்பிடும் போது பயங்கரமாக கோமதி கோபப்பட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் அரசி, நான் செய்தது மிகப்பெரிய தவறு. எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள். என்னிடம் பேசுங்கள் அப்பா என்று பாண்டியன் காலை பிடித்து கதறி அழுதார். பின் தன்னுடைய அண்ணன்கள் ஒவ்வொரு இடமும் மன்னிப்பு கேட்டு கதறி இருந்தார் அரசி. ஆனால், அவர்கள் யாருமே மன்னிக்கவில்லை. கோமதி, அரிசியை திட்டிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் தங்கமயில், உன் அப்பா- அம்மா மீது சத்தியம் செய்து செய். யாரிடமும் பேச மாட்டேன் என்று சொல் என்றார்.
நேற்று எபிசோட்:
அரசி, பாண்டியன் மீது சத்தியம் செய்து நான் அவருடன் பேச மாட்டேன். பழகமாட்டேன் என்றார். அதற்கு பின் கோமதி மீதும் சத்தியம் செய்தார். அதற்குப் பிறகுதான் பாண்டியன் அரசிடம் பேசி இருந்தார். வீட்டில் எல்லோருமே கொஞ்சம் ஓரளவுக்கு சமாதானம் ஆனார்கள். சுகன்யாவிற்கு மட்டும் வயிறு எரிந்தது. கடைசியில் பாண்டியன், நான் ஒரு இடத்திற்கு போய் விட்டு வருகிறேன். யாரும் என்னுடன் வர வேண்டாம் என்று சொல்லிவிட்டு கிளம்பி இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டியன் வெளியே கிளம்பும்போது சக்திவேல் கிண்டல் கேலி செய்து பேசுகிறார். கோபத்தில் பழனி, சக்திவேலை திட்டுகிறார். அதற்குப்பின் வெளியே வந்த கோமதி, தன்னுடைய மூத்த அண்ணன் முத்துவேலை அழைக்கிறார். ஆனால், சக்திவேல் பயங்கர கேவலமாக கோமதியையும் அவருடைய குடும்பத்தையும் பேசுகிறார். அப்போது வெளியே வந்த முத்துவேல், என்ன விஷயம் என்று கேட்கிறார்.
சீரியல் ட்ராக்:
அப்போது கோமதி, என் மகள் அவள் செய்த தவறை உணர்ந்து விட்டாள். தயவு செய்து என் மகளின் வாழ்க்கையில் குமார் வரக்கூடாது. அதற்கு நீங்கள் தான் வாக்குறுதி கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார். உடனே முத்துவேல், ஒரு தந்தையாக வலி வேதனை என்னவென்று எனக்கு தெரியும். இனிமேல் எங்கள் வீட்டு பையன் உங்கள் மகளை தொந்தரவு செய்ய மாட்டான். தைரியமாக போ என்று சொன்னவுடன் கோமதி திரும்பி வந்து விடுகிறார். பின் முத்துவேல், குமாருக்கு பெண் பார்த்து விட்டேன். நாளை பெண் வீட்டாரிற்கு போகலாம் என்று சொன்னவுடன் சக்திவேல் ஷாக் ஆகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.