ஆம இவர் எப்படி மூர்த்தி மகனா நடிக்க முடியும் – ப்ரோமோவை வைத்தே புது புது கதை சொல்லும் ரசிகர்கள்.

0
818
pandian
- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் ப்ரோமோவை நெட்டிசன்கள் விமர்சித்து வரும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் வகுத்து வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், லாவண்யா, குமரன் தங்கராஜன், சரவணன், தீபிகா என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-

அதோடு இந்த சீரியல் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று இருந்து இருக்கிறது. சீரியலில் பிரசாந்த் தான் இந்த கொலையை செய்கிறார் என்ற உண்மை மீனாவிற்கு தெரிய வருகிறது. பின் அனைவரும் நினைத்தபடி பிரசாந்த் உண்மையை சொல்கிறார். இன்னொரு பக்கம் ஜனார்த்தன் கண்விழித்து நடந்த உண்மையெல்லாம் சொல்கிறார். போலீஸ் அந்த ஆதாரத்தை கோர்ட்டில் ஆஜர் செய்கிறது. இதனை அடுத்து போலீஸ் கதிர்- ஜீவாவை விடுதலை செய்கிறார்கள்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்:

இனி பிரசாந்த் கைது செய்யப்படுவாரா? பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் சேருமா? என்ற பல அதிரடித்திருப்பங்களுடன் சீரியல் சென்று இருக்கிறது. இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிறைவடையும் முன்னரே இரண்டாம் சீசனுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பது தான் இரண்டாவது பாகத்தின் டைட்டில். இதற்கு முன்பு அண்ணன் தம்பிகள் கதையை மையமாக வைத்து எடுத்திருந்தார்கள்.

சீரியல் கதை:

தற்போது இரண்டாவது சீசனில் அப்பா- மகன்களுக்கு இடையேயான உறவை மையமாக வைத்து கதையை எடுக்கிறார்கள். மேலும், முதல் சீசனில் அண்ணனாக நடித்த ஸ்டாலின் தற்போது அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஸ்டாலினுக்கு மனைவியாக நிரோஷா நடிக்கிறார். மேலும் இவர்களுடைய மகன்களாக விஜே கதிர், வசந்த், ஆகாஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சண்டக்கோழி என்ற தொடரில் விஜே கதிர் நடிக்கிறார். கடைசி மகனாக ஆகாஷ் நடிக்கிறார். இவர் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் அனாமிகா தொடரில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் வெப் சீரிஸ், படங்கள் என பலவற்றிலும் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

சீரியல் நடிகர்கள்:

இரண்டாவது மகனாக வசந்த் நடிக்கிறார். ஏற்கனவே முந்தைய சீசனில் முல்லையின் அக்கா மகன் பிரசாந்த் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் வசந்த். இவர் இதற்கு முன்பே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த பாரதிதாசன் காலனி என்ற தொடரில் கதாநாயகனாக நடித்திருந்தார். அதற்கு முன்னே இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி இருந்த சீரியலிலும் நடித்திருந்தார். பின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பிரசாந்த் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின் இந்த சீரியலை விட்டு விலகிவிட்டார். அவருக்கு பதில் மகேஷ் என்பவர் நடித்திருந்தார்.

நெட்டிசன்கள் ஆதங்கம்:

இந்த நிலையில் இரண்டாவது சீசனில் ஸ்டாலினுக்கு மகன் கதாபாத்திரத்தில் வசந்த் நடிப்பது குறித்து தான் நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். சீரியல் பெயரை மாத்தணும் இல்ல, ஆர்டிஸ்ட்ட மாற்றனும். ரெண்டுமே இல்லனா எப்படி? தம்பி மனைவியின் உறவுக்காரராக இருந்தவர் எப்படி இந்த சீசனில் உங்களுக்கு மகனானார்? நாங்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை பார்ப்பதே எங்களுடைய ஃபேவரட் நடிகர்கள் இருப்பதால்தான். அவர்களே இல்லை என்றால் எப்படி என்றெல்லாம் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். எது எப்படியோ பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல் கூடிய விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. கண்டிப்பாக இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement