கதிர், ராஜி திருமண ரகசியத்தை போட்டு உடைத்த மீனா, அதிர்ச்சியில் கோமதி- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

0
303
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் கடந்த வாரம் வீட்டில் பாண்டியன், ராஜி- மீனா என்று பெயரை சொன்னவுடன் இருவருமே சந்தோஷப்பட்டு வெளியே வந்தார்கள். பின் வாங்கி தந்த தின்பண்டத்தை பாண்டியன் கொடுத்தார். இதை பார்த்து செந்தில்- கதிர் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தார்கள். பின் ரூமில் செந்தில்- மீனா இடையே சண்டை நடக்க, கோபத்தில் மீனா தூங்க வெளியே வந்தார். அதற்குப் பின் மீனா, தங்கமயில், ராஜி மூவருமே தன்னுடைய மாமனாரின் பிறந்த நாளுக்காக என்ன வாங்கலாம் என்று யோசனை செய்தார்கள்.

-விளம்பரம்-

கடைசியில் மூவரும் ரெடி ஆகி வெளியே கிளம்ப பார்த்தார்கள். உடனே பாண்டியன், எங்கே? என்று கேட்டதற்கு மூவருமே தங்கமயில் வீட்டுக்கு போகிறோம் என்று சொன்னார்கள். உடனே பாண்டியன் செலவுக்கு 200 ரூபாய் கொடுத்து அனுப்பி இருந்தார். இந்த வாரம் மீனா, தங்கமயில், ராஜி மூவருமே தன்னுடைய மாமனாருக்கு துணி எடுக்க ஜவுளிக்கடைக்கு போனார்கள். அங்கு துணி எல்லாம் எடுத்து விட்டு பில் கொடுக்க மீனா வந்தார். உடனே ராஜி தடுத்து கொடுக்கப் போனார். ஆனால், தன்னிடம் பணம் இல்லை என்று தங்கமயில் வருத்தப்பட்டார்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

கடைசியில் மீனா பில் கொடுத்தார். இதற்கிடையில் மீனா, செந்திலுக்கு நிறைய முறை போன் செய்து கொண்டே இருந்தார். ஆனால், செந்தில் கண்டுகொள்ளவிலை. உடனே மீனா, இதுதான் நீங்கள் என்னிடம் பேசுவது கடைசி என்று மெசேஜ் அனுப்பி இருந்தார். இதை பார்த்து செந்தில் அதிர்ச்சி ஆனார். இன்னொரு பக்கம் மூவரும் நல்ல ஹோட்டலில் சாப்பிட்டு போனார்கள். நேற்று எபிசோடில் மூன்று மருமகள்களும் ஷாப்பிங் முடித்து விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும்போது மீனா, எனக்கு வேலை இருக்கிறது என்று சொல்லிவிட்டு கிளம்பி இருந்தார்.

நேற்று எபிசோட்:

மற்ற இரண்டு பேர் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது கோமதி, என்ன பை? என்று கேட்டதற்கு ஏதோ சொல்லி ராஜி-தங்கமயில் சமாளித்தார்கள். இதற்கிடையே செந்தில், மீனாவை பற்றி வீட்டில் விசாரித்து ராஜிக்கு போன் செய்து பார்க்கிறார். ஆனால், அவர் எடுக்கவில்லை. பின் வேலை செய்த இடத்தில் செந்தில் விசாரிக்கிறார். ஆனால், அங்கும் மீனாவை பற்றி யாருக்கும் எதுவும் தெரியவில்லை. இதை கதிர் இடம் சொல்லி செந்தில் ரொம்பவே பயப்படுகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் கதிர், ராஜிக்கு போன் பண்ணி மீனாவை விசாரிக்க, அவர் தெரியாது என்கிறார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இன்னொரு பக்கம் மீனாவும் மனம் மாறி போனை ஆன் செய்தவுடன் செந்தில் கால் செய்கிறார். பிறகு தான் இருக்கும் இடத்தை மீனா சொன்னவுடன் இருவருமே செல்கிறார்கள். அங்கு செந்தில்- மீனா தனியாக மனதை விட்டு பேச ஒரு வழியாக அவர்களுக்கு இடையில் நடந்த பஞ்சாயத்து முடிந்து விடுகிறது. கதிர், வீட்டிற்கு வரமாட்டேன். சவாரி போகணும் என்று சொன்னவுடன் எல்லோருமே வருத்தப்படுகிறார்கள். ராஜி, கதிரை நினைத்து வருத்தப்படுகிறார்.

சீரியல் ட்ராக்:

ரூமில் சரவணனும் தங்க மயிலும் இதைப் பற்றி பேசும்போது, நீங்கள் உங்களுக்கும் கொஞ்சம் பணத்தை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை தங்கமயில் சொல்கிறார். கதிரை நினைத்து கோமதி ரொம்ப வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருக்க, அந்த சமயம் பார்த்து ராஜி வந்தவுடன் கோமதி திட்டிக் கொண்டிருந்தார். உடனே கோபப்பட்ட மீனா, ராஜி தான் கதிரை கல்யாணம் பண்ணி வைக்க கேட்டாளா? என்று கேட்டவுடன் கோமதி, ராஜி இருவருமே ஷாக் ஆகிறார்கள். இவர்கள் சொன்னதை அரசி கேட்டிருப்பாரா என்ற விறுவிறுவிப்பில் சீரியல் முடிகிறது.

Advertisement