ஆதார் கார்டால் தங்க மயிலுக்கு வந்த புது ப்ரச்சனை, மீனாவுக்கு எழுந்த சந்தேகம்- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

0
456
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் கடந்த வாரம் ராஜி, தன் அண்ணன் சக்தியின் உண்மை முகத்தை சொன்னதால் பாண்டியன் வெளுவெளு என்று வெளுத்தார். இன்னொரு பக்கம் ராஜி அப்பா, சக்தி செய்தது தவறு என்று அடித்தார். இதனால் கோபப்பட்ட சக்தியின் அப்பா, தன் அண்ணன் இடம் வாக்குவாதம் செய்தார். பின் கடையில் பாண்டியன், அவருடைய மகன்கள் எல்லோருமே நடந்ததை பற்றியும், சக்தி என்ன செய்வான்? என்பதை பற்றியும் பேசி இருந்தார்கள்.

-விளம்பரம்-

மேலும், வீட்டில் தங்கமயில், தன்னுடைய மாமனாருக்கு இரவு 12 மணிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல எல்லோரையும் எழுப்பி விட்டு அலப்பறை செய்தார். கடைசியில் அனைவரும் பாண்டியனை எழுப்பி வாழ்த்து சொல்லி கேக் வெட்ட கூப்பிட்டார்கள். ஆனால், பாண்டியன் கோபத்தில் திட்டி அனுப்பி விட்டார். மறுநாள் காலையில் எல்லோருமே பாண்டியனின் பிறந்த நாளுக்காக தயாராகி இருந்தார்கள். அந்த சமயம் பார்த்து பாண்டியன், உள்ளே வந்தவுடன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று எல்லோரும் கத்த, பாண்டியன் அதிர்ச்சியாகி நின்றார்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

பின் அவருக்கு எல்லோரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லி ஆசிர்வாதம் வாங்கி இருந்தார்கள். அதற்குப்பின் பாண்டியனை கேக் வெட்டி கொடுத்தார். அப்போது பாண்டியன் ஆனந்த கண்ணீரில், இதுவரை என் வாழ்க்கையில் யாரும் இப்படி செய்ததில்லை என்று சொன்னதற்கு கோமதி, இதையெல்லாம் உங்கள் மூன்று மருமகள்களும் செய்தது தான் என்று சொன்னார். அதற்குப்பின் பாண்டியனுக்கு வாங்கி வைத்த கிப்ட்டை கொடுதார்கள். பாண்டியன் அதை பிரித்து பார்த்து சந்தோஷப்பட்டார். இருவருமே தங்களுக்கு கொடுத்த புது துணியை அணிந்து கொண்டு பைக்கில் போனார்கள்.

பாண்டியன் பிறந்தநாள்:

நேற்று எபிசோட்டில், மொத்த பாண்டியன் குடும்பமே கோயிலுக்கு போயி சாமி கும்பிட்டு சந்தோஷமாக இருந்தார்கள். அந்த சமயம் பாத்து கோமதியின் அண்ணன், சக்தி இருவருமே வந்தார்கள். அவர்களை பார்த்து பாண்டியன், என்னை யாரையும் இனிமேல் அனாதைன்னு சொல்ல முடியாது. எனக்கு என்று ஒரு குடும்பம் இருக்கிறது என்று பெருமையாகவும், சந்தோஷமாகவும் பேசி இருந்தார். இதையெல்லாம் கேட்ட கோமதியின் அண்ணன் கோபப்பட்டு, நம்ம வீட்டு பெண்ணை தூக்கி அசிங்கப்படுத்தியது போல் அவருடைய மகளை தூக்குடா, எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னார்.

-விளம்பரம்-

நேற்று எபிசோட்:

கடைசியில் வீட்டில் பாண்டியன் மனநிறைவுடன் எல்லோருடன் சந்தோஷமாக பேசிக்கொண்டு சாப்பிட்டு இருந்தார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோடில் பாண்டியன், சரவணன் திருமணத்தை ரெஜிஸ்டர் செய்ய வேண்டும். ஆதார் கார்டை கொண்டு வர சொல்லி தங்கமயில் இடம் கேட்டார். உடனே அவர் ரொம்ப பயப்படுகிறார். காரணம், அந்த ஆதார் கார்டை பார்த்தால் தன்னைவிட சரவணன் வயதில் சின்னவர் என்பர் தெரிந்து விடும் என்று புலம்புகிறார். பின் இந்த விஷயத்தை தன்னுடைய அம்மாவிடம் தங்கமயில் சொல்ல அவர், நீயே சமாளி. எல்லாத்தையும் நான் சொல்ல முடியாது என்று போனை வைத்து விடுகிறார்.

இன்றைய எபிசோட்:

மறுநாள் காலையில் மீண்டும் ஆதார் கார்டை பற்றி தங்கமயில் பாண்டியன் கேட்க, அவர் பயத்தில் அமைதியாகவே இருக்கிறார். ஃபோனில் இல்லையா என்று சரவணன், மீனாவும் கேட்க, இல்லை என்று தங்கமயில் சொன்னார். வீட்டில் இருந்து எடுத்து வர சொல்லு என்று பாண்டியன் கேட்கிறார். ஆனால், ஏதேதோ சொல்லி சமாளித்து கொண்டு இருக்கிறார் தங்கமயில். இதையெல்லாம் பார்த்த மீனாவுக்கு சந்தேகம் வருகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது .

Advertisement