தங்கமயிலுக்காக மீனா செய்த வேலை, பாண்டியனுக்கு கோமதி சொன்ன அறிவுரை- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

0
235
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் பணம் விஷயத்தில் தவறு செய்தது தங்கமயில் என்று தெரிந்தவுடன் பாண்டியன் கோபப்பட்டு பேச, தங்கமயில் வருத்தப்பட்டு அழுதார்.
பின் தங்கமயில் செய்த வேலையை நினைத்து கோமதி புலம்பிக்கொண்டே இருந்தார். ராஜி-மீனா எவ்வளோ சமாதானம் செய்தும் கோமதி ஏற்றுக்கொள்ளவே இல்லை. இவர்கள் பேசுவதை எல்லாம் தங்கமயில் கேட்டு அழுது கொண்டே சென்று விட்டார். பின் தங்கம்யில் சாப்பிடவில்லை என்று மீனா சொல்ல, அவளுக்கு சாப்பிட தெரியாதா? என்று கோமதி கோவமாக சொன்னார்.

-விளம்பரம்-

பின் ராஜி – மீனா இருவருமே தங்கமயிலை சாப்பிட கூப்பிட்டார்கள். ஆனால், அவர் வரவில்லை. தங்கமயில் இடம் என்னென்னவோ பேசி ராஜு- மீனா சமாதானம் செய்து சாப்பிட அழைத்து வந்தார்கள். ஆனால், கோபத்தில் இருந்த கோமதி நக்கல் ஆகவே தங்கமயிலை வம்பு இழுத்து பேசி இருந்தார். அதற்கு பின் மீனா, தங்கமயில் விஷயத்திற்கே இப்படி என்றால், நீங்கள் ராஜீ -கதிருக்கு செய்து வைத்த கல்யாணம் தெரிந்தால் என்ன ஆகும்? என்று சொன்னவுடன் கோமதிக்கு நெஞ்சு வலியே வந்தது. உடனே ராஜி-மீனா தைரியம் சொன்னார்கள்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

நேற்று எபிசோடில் வீட்டில் பாண்டியன், எல்லோரையும் வரவைத்து குடும்ப சூழ்நிலையை எடுத்து சொன்னார். அது எல்லோருக்குமே போர் அடித்தது. ஆனால், இவர்கள் எல்லோருமே சேர்ந்து பேசும்போது தங்கமயிலை யாரும் கூப்பிடவே இல்லை. இதை எல்லாம் தங்கமயில் ரூமில் இருந்து பார்த்து ரொம்ப வருத்தப்பட்டார். அதற்குப்பின் எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள். தங்கமயிலை யாருமே கூப்பிடவில்லை. யாராவது கூப்பிடுவார்கள் என்று அவரும் எதிர்பார்த்து ஏமாந்தார்.

நேற்று எபிசோட்:

அதற்குப் பின் மீனா- ராஜி இருவருமே தங்கமயிலை சாப்பிட கூப்பிட்டார்கள். ஆனால், அவர் வரவே இல்லை. எனக்கு சாப்பிட விருப்பமில்லை என்று சொல்லி அனுப்பி விட்டார். பின் தங்கமயில் அம்மா போன் செய்தார். உடனே தங்கமயில் நடந்ததை சொல்ல அவர் மீண்டும் அறிவுரை சொல்ல பார்த்தார். உன்னால் தான் எல்லா பிரச்சினையும் என்று திட்டி போனை வைத்து விட்டார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனா, தங்கமயில் சாப்பிடவில்லை என்று சரவணிடம் சாப்பாடு கொடுத்து அனுப்பி விடுகிறார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

முதலில் மறுத்த சரவணன் பின் சாப்பாட்டை எடுத்து கொண்டு போனார். ஆனால், அவர் பெரிதாக வருத்தப்படாமல் சாப்பாட்டை மேசை மீது வைத்து சாப்பிடு என்று சொல்லி விட்டு சென்று விடுகிறார். இதையெல்லாம் பார்த்து தங்கமயில், ரொம்பவே கவலைப்படுகிறார். இன்னொரு பக்கம் சித்தப்பு, தன்னுடைய மாமா செய்வது ரொம்ப தவறு. மூன்று பையன்கள் அடித்துக் கொண்டால் நன்றாக இருக்காது. அவர்களுக்கு திருமணமாகிவிட்டது என்று அறிவுரை சொல்கிறார். இதனால் கோமதியும் பாண்டியனிடம் கதிரை அடித்ததை பற்றி பேசி அறிவுரை சொல்கிறார். பின் தங்கமயில் சாப்பிடாததை பற்றி கோமதி வருத்தப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement