ராஜியின் மீது கோபப்பட்ட கோமதி, மீனாவை புலம்ப வைத்த பாண்டியன் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

0
129
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் ப்ராக்டிஸ் செய்ய கதிர்- ராஜி இருவருமே கிரவுண்டுக்கு சென்று இருந்தார்கள். அங்கு வந்த பாண்டியனுக்கு உண்மை எல்லாம் தெரிந்து விட்டது. பின் கோபப்பட்டு வீட்டிற்கு வந்த பாண்டியன் எல்லோரிடமும் நடந்ததை சொல்ல, என்ன செய்வது? என்று புரியாமல் எல்லோருமே அமைதியாக இருந்தார்கள். அந்த சமயம் பார்த்து கதிர்-ராஜி வீட்டிற்கு வந்தார்கள். அப்போது அவரிடம் நடந்ததை பாண்டியன் கேட்க, கதிர் உண்மை எல்லாம் சொன்னார். உடனே பாண்டியன், போலீஸ் வேலை தேவையில்லை. வேறு ஏதாவது வேலை செய் என்று சொன்னார்.

-விளம்பரம்-

அதற்கு கதிர், முடியாது. அது ராஜியின் கனவு. நான் அவளுக்கு உறுதுணையாக நிற்பேன். யார் எது சொன்னாலும் கேட்க மாட்டேன் என்று தன்னுடைய தந்தையிடம் எதிர்த்து பேசி இருந்தார். பின் கதிர்- பாண்டியன் இருவருக்குமே வாக்குவாதம் முற்றியது. இதை எல்லாம் பார்த்த ராஜி, நான் போலீஸ் ஆகவில்லை என்று கதிரிடம் சொல்ல, அவர் கோபப்பட்டார். கதிர், ராஜிக்கு எடுத்த சொல்லி புரிய வைத்தார். ராஜியும் தான் போலீசாகும் கனவில் உறுதியாக இருக்கிறார். அந்த சமயம் வந்த கோமதி, பாண்டியனுக்கு சப்போர்ட் செய்து பேசி இருந்தார்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

உடனே கோபத்தில் கதிர், எனக்கு பிடிக்காத கல்யாணத்தை செய்து வைத்தாய். ராஜியின் கனவை அழிக்கப் பார்க்கிறாய். எங்களுடைய விருப்பத்தை யோசிக்க மாட்டீர்களா? என்று கேட்டவுடன் கோமதியால் எதுவுமே பேச முடியவில்லை. அங்கு இருந்து கிளம்பி விட்டார். பின் ராஜி, கதிர் தனக்காக சப்போர்ட் செய்து பேசுவது எல்லாம் நினைத்து ரொம்ப சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் பள்ளியில் தங்கமயில், பிள்ளைகளுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது தலைமை ஆசிரியர், டூப்ளிகேட் சர்டிபிகேட் கொடுக்க வேண்டும் என்று சொன்னவுடன் அவர் ரொம்பவே பயந்தார்.

கடந்த வாரம் எபிசோட்:

மேலும், மீனா வேலை செய்யும் இடத்திற்கு அவருடைய அம்மா வந்திருந்தார். அவர் பொங்கல் சீராக பணத்தை கொடுத்து நகை வாங்க சொல்ல, மீனா வாங்கவே இல்லை. இதனால் மீனா அம்மா வருத்ததுடன் அங்கிருந்து கிளம்பி விட்டார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கிச்சனில் கோமதி சமைத்துக் கொண்டிருக்கிறார். மருமகள்களுமே அவருக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது ராஜி, நான் ஏதாவது செய்யட்டுமா? என்று கேட்க, கதிர் பேசியதற்கு கோபப்பட்டு ராஜியை திட்டுகிறார் கோமதி.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

உடனே மீனா, கோமதிக்கு ஐஸ் வைத்து அவருடைய மனதை மாற்றி கதிர்-ராஜி பக்கம் இருக்கும் நியாயத்தை புரிய வைக்கிறார். அதற்குப்பின் வீட்டில் எல்லோருமே பொங்கலுக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது பாண்டியன், கதிரை பார்த்து இன்னும் ஓடவில்லையா? இங்கு என்ன செய்கிறீர்கள்? நீ அவனை நம்பாதே என்று ராஜிக்கு அறிவுரை சொல்கிறார். அதற்கு கோமதி, அவர்கள் குழந்தை இல்லை. அவர்களுக்கு எல்லாம் தெரியும் என்று சப்போர்ட் செய்து பேசுகிறார்.

சீரியல் ட்ராக்:

பின் வீட்டில் பண்டிகைக்கான ஏற்பாடுகளை மொத்த குடும்பமும் செய்து கொண்டிருக்கிறது.
அப்போது பாண்டியன், தங்கமயில் வீட்டில் சீர்வரிசை செய்ய வருகிறார்கள் என்று சொல்கிறார். இதைக் கேட்டவுடன் மீனாவின் முகம் வாடுகிறது. இதை அறிந்த செந்தில் அவருக்கு ஆறுதல் சொல்கிறார். உடனே மீனா, என்னுடைய அம்மா தனியாக சந்தித்து பணம் கொடுத்தார். ஆனால், எனக்கு அதில் வாங்க விருப்பமில்லை. அவர்கள் வீட்டிற்கு வரவேண்டும் என்று ரொம்ப எமோஷனலாக பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement