விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பழனி, தன்னுடைய கல்யாண வேலைகளை செய்து கொண்டிருந்தார். இதை பார்த்து அவருடைய அண்ணன்கள் கோபப்பட்டார்கள். பின் பழனியை அழைத்த அவர் அண்ணன்கள், இந்த முறை நாங்கள் கல்யாணத்தில் எந்த பிரச்சினையும் செய்ய மாட்டோம். நீ தைரியமாக இரு. நாங்களும் கல்யாணத்துக்கு வருகிறோம் என்று சொன்னவுடன் பழனி- அப்பத்தா இருவருமே ஷாக் ஆனார்கள். சந்தோஷத்தில் பழனி தன்னுடைய அண்ணன்களை கட்டிபிடித்து நன்றி சொன்னார்.
இன்னொரு பக்கம் பாண்டியன் வீட்டில் தடபுடலாக எல்லோருமே பழனியின் கல்யாணத்திற்காக தயாராகிக் கொண்டிருந்தார்கள். பின் சக்தி, அரசி இடம் பேச, அந்த சமயம் பார்த்து பாண்டியன் வந்தவுடன் சக்தி ஒளிந்து கொண்டார். பழனியில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் கோயிலில் மும்முரமாக நடந்தது. பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்கள் ஒவ்வொரு வேலையாக பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்தார்கள். அதற்குப்பின் வீட்டில் உள்ள எல்லோருமே பழனியின் திருமணத்தை நினைத்து சந்தோஷப்பட்டு கொண்டிருந்தார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் மணமேடையில் பழனி, மணப்பெண் கலந்து கொண்டிருந்தார்கள். பழனிக்கு திருமணம் ஆகப்போகிறது என்று பாண்டியன் குடும்பம் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அந்த நேரம் பார்த்து பெண்ணுடைய பெற்றோர்கள், இந்த திருமணத்தில் எங்களுக்கு விருப்பமில்லை. கல்யாணம் நடக்காது என்று பெண்ணின் கையை பிடித்து மணமேடையில் இருந்து எழுப்பி இருந்தார்கள். உடனே
அதிர்ச்சியில் பாண்டியன் குடும்பம், என்ன ஆனது? என்ன பிரச்சனை? பேசிக்கொள்ளலாம் என்று சொன்னார்கள்.
நேற்று எபிசோட்:
பெண் வீட்டில் யாருமே ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குப்பின் பெண்ணின் வீட்டிற்கு பழனியின் அண்ணன்கள் சென்று கல்யாணத்தை நிறுத்த பேசி இருந்தார்கள். ஆனால், அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. கடைசியில் பழனியின் சின்ன அண்ணன், பழனிக்கு ஆண்மை இல்லை. அவனால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று பொய்யான ஒரு விஷயத்தை சொன்னவுடன் பெண் வீட்டிலும் நம்பி விட்டார்கள். இந்த காரணத்தை வைத்து தான் பழனி திருமணத்தை நிறுத்தி இருந்தார்கள். ஆனால், பெண் வீட்டார் காரணம் வெளியே சொல்லாமல் கல்யாணம் நடக்காது என்று கிளம்பி இருந்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இதனால் மொத்த குடும்பமே இடிந்து போனது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் பழனியின் திருமணம் நின்று விட்டதால் பாண்டியன் குடும்பமே ரொம்ப எமோஷனலாக அழுது பேசுகிறார்கள். அப்பத்தா, பழனியை நினைத்து வேதனையில் அழுகிறார். அந்த சமயம் பார்த்து பழனியின் அண்ணன்கள், மண்டபத்திற்கு வந்து நக்கலாக பேசுகிறார்கள். உடனே பாண்டியன் மகன்கள், அவர்களிடம் சண்டைக்கு போகிறார்கள். அப்போது பழனியின் அண்ணன்கள், உனக்கு நாங்கள் பெண் பார்த்து வைத்திருக்கிறோம்.
சீரியல் ட்ராக்:
இந்த பெண்ணின் பெயர் சுகன்யா. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரே மாதத்தில் அவருடைய கணவர்
விட்டு சென்றுவிட்டார். உனக்கும் இரண்டு முறை திருமணம் தடைப்பட்டு விட்டது. இரண்டு பேருக்குமே பொருத்தம் நன்றாக இருக்கும். நல்ல பொண்ணு என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால், பழனிக்கு இந்த திருமணத்தில் விருப்பமே இல்லை. உடனே அப்பத்தா அழுதுகொண்டு பாண்டியனிடம் கேட்கிறார். பாண்டியன் சொன்ன ஒரு காரணத்திற்காக பழனியும் திருமணத்திற்கு ஒத்துக்கொள்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.