அவசர அவசரமாக திருமண ஏற்பாடு செய்யும் பாண்டியன், அரசி என்ன சொல்லப் போகிறார்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

0
158
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் அரசி, நான் செய்தது மிகப்பெரிய தவறு. எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள். என்னிடம் பேசுங்கள் அப்பா என்று பாண்டியன் காலை பிடித்து கதறி அழுதார். பின் தன்னுடைய அண்ணன்கள் ஒவ்வொரு இடமும் மன்னிப்பு கேட்டு கதறி இருந்தார் அரசி. ஆனால், அவர்கள் யாருமே மன்னிக்கவில்லை. கோமதி, அரிசியை திட்டிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் தங்கமயில், உன் அப்பா- அம்மா மீது சத்தியம் செய்து செய். யாரிடமும் பேச மாட்டேன் என்று சொல் என்றார்.

-விளம்பரம்-

அரசி, பாண்டியன் மீது சத்தியம் செய்து நான் அவருடன் பேச மாட்டேன். பழகமாட்டேன் என்றார். அதற்கு பின் கோமதி மீதும் சத்தியம் செய்தார். அதற்குப் பிறகுதான் பாண்டியன் அரசிடம் பேசி இருந்தார். வீட்டில் எல்லோருமே கொஞ்சம் ஓரளவுக்கு சமாதானம் ஆனார்கள். சுகன்யாவிற்கு மட்டும் வயிறு எரிந்தது. கடைசியில் பாண்டியன், நான் ஒரு இடத்திற்கு போய் விட்டு வருகிறேன். யாரும் என்னுடன் வர வேண்டாம் என்று சொல்லிவிட்டு கிளம்பி இருந்தார்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

நேற்று எபிசோட்டில் பாண்டியன் வெளியே கிளம்பும்போது சக்திவேல் கிண்டல் கேலி செய்து பேசி இருந்தார். கோபத்தில் பழனி, சக்திவேலை திட்டி இருந்தார். அதற்குப்பின் வெளியே வந்த கோமதி, தன்னுடைய மூத்த அண்ணன் முத்துவேலை அழைத்தார். ஆனால், சக்திவேல் பயங்கர கேவலமாக கோமதியையும் அவருடைய குடும்பத்தையும் பேசி இருந்தார். அப்போது வெளியே வந்த முத்துவேல், என்ன விஷயம் என்று கேட்டார்.

நேற்று எபிசோட்:

அப்போது கோமதி, என் மகள் அவள் செய்த தவறை உணர்ந்து விட்டாள். தயவு செய்து என் மகளின் வாழ்க்கையில் குமார் வரக்கூடாது. அதற்கு நீங்கள் தான் வாக்குறுதி கொடுக்க வேண்டும் என்று சொன்னார். உடனே முத்துவேல், ஒரு தந்தையாக வலி வேதனை என்னவென்று எனக்கு தெரியும். இனிமேல் எங்கள் வீட்டு பையன் உங்கள் மகளை தொந்தரவு செய்ய மாட்டான். தைரியமாக போ என்று சொன்னவுடன் கோமதி திரும்பி வந்து விட்டார். பின் முத்துவேல், குமாருக்கு பெண் பார்த்து விட்டேன். நாளை பெண் வீட்டிற்கு போகலாம் என்று சொன்னவுடன் சக்திவேல் ஷாக் ஆனார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டியன், பழனியை அழைத்துக் கொண்டு தன்னுடைய அக்காவின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு பாண்டியனின் அக்கா, உன் மகள் படிக்கிறார். கல்யாணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டாயே, வேறு எங்காவது தான் என் மகனுக்கு பெண் தேட வேண்டும் என்று சொல்கிறார். உடனே பாண்டியன், அரசியை உங்கள் மகனுக்கு திருமணம் செய்து வைக்க எனக்கு சம்மதம். உங்களுக்கு சம்மதம் என்றால் நாளை நிச்சயதார்த்தம் செய்து கொள்ளலாம் என்று சொன்னவுடன் பாண்டியனின் அக்கா ரொம்ப சந்தோஷப்படுகிறார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் வீட்டில் கோமதி, அரசி இனி கல்லூரிக்கு போகக்கூடாது. படிக்கவே தேவை இல்லை என்று ஆக்ரோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார். மூன்று மருமகள்கள் எடுத்து சொல்லியுமே கோமதி கேட்கவே இல்லை. அந்த சமயம் பார்த்து பாண்டியன், பழனி இருவரும் வீட்டுக்கு வருகிறார்கள். அப்போது பாண்டியன், அரசிக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்கிறேன். என்னுடைய அக்கா மகன்தான். நாளை பெண் பார்க்க வீட்டிற்கு வருகிறார்கள் என்று சொன்னவுடன் எல்லோருமே ஷாக்காகிறார்கள். கோமதி, திருமணமே செய்து வைத்துவிடலாம் என்று சொல்கிறார். பாண்டியன், அரசி இடம் திருமணத்தை பற்றி பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement