விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கதிர், சவாரியில் அழைத்து சென்ற பெண்ணிடம் அவர் நண்பர்கள் தவறாக கண்ணோட்டத்தில் பார்த்ததால் அந்த பெண் ரொம்ப பயந்தார். உடனே கதிர், அந்த பெண்ணுக்கு ஆறுதல் சொல்லி அவர்களிடம் இருந்து காப்பாற்றி வீட்டில் விட்டார். பின் போலீஸ், ஒரு பெண்ணை கதிர் கடத்தி விட்டான் என்று சொல்லி தரதரவென இழுத்துச் சென்றது. வீட்டில் உள்ள எல்லோரும் எடுத்து சொல்லியுமே போலீஸ் கேட்கவில்லை. இதனால் பாண்டியன் குடும்பம் உடைந்து போய் இருந்தது. பின் பாண்டியன் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் விசாரித்தார்.
அப்போது கதிர், நான் எந்த தவறும் செய்யவில்லை என்று சொல்லியுமே போலீஸ் கேட்கவில்லை. இதனால் என்ன செய்வது என்று புரியாமல் மொத்த குடும்பமே பரிதவித்து இருந்தது. பின் போலீஸ், கதிரை உண்மையை சொல்லு என்று அடி அடி என்று வெளுத்து வாங்கி, கதிரை பயங்கரமாக துன்புறுத்தி இருந்தார்கள். இன்னொரு பக்கம் கதிரின் நிலைமையை நினைத்து கோமதி அழுது புலம்பி கொண்டிருக்க, மீனா- தங்கமயில் ஆறுதல் சொல்லி இருந்தார்கள். ராஜி, தன்னுடைய கணவர் எந்த தவறும் செய்யவில்லை. அவர் வெளியே வருவார் என்று தைரியமாக இருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு வெளியே ராஜியின் அப்பா, சித்தப்பா இருவருமே பாண்டியனின் குடும்பத்தை ரொம்ப கேவலமாக பேசி இருந்தார்கள். இதனால் ஆத்திரத்தில் பாண்டியன் அவர்களிடம் சண்டைக்கு போக, இரு குடும்பத்தினருக்கும் இடையே பயங்கர தகராறு நடந்தது. பின் பாண்டியன், என் மகன் மீது எந்த தவறும் இல்லை என்று நிரூபித்து வெளியே கூட்டி விடுவேன் என்று சவால் விட்டார். பின் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன பாண்டியன், கதிரை பார்த்து ரொம்ப எமோஷனல் ஆகி இருந்தார். அப்போது வந்த ராஜியின் சித்தப்பா, பாண்டியன் குடும்பத்தை பற்றி ரொம்ப மோசமாக பேசி இருந்தார்.
நேற்று எபிசோட்:
இதற்கிடையில் கதிர், நீங்கள் அந்த பெண்ணை கண்டுபிடித்தால் தான் நான் வெளியே வருவேன் என்று செந்தில் இடம் ஐடியா கொடுத்தார். நேற்று எபிசோடில் போலீஸ் ஸ்டேஷனுக்கு ராஜி போய் இருந்தார். அப்போது போலீஸ், நீ பெரிய குடும்பத்து பெண்ணாக இருந்து எதற்காக இவனை நம்பி போனாய். இவன் ரொம்ப மோசமானவன் என்று கதிரை சொல்ல,அவன் அப்படிப்பட்டவன் இல்லை. அவன் எந்த பெண்ணையும் கடத்தவில்லை என்று கதிருக்கு சப்போர்ட் செய்து பேசி இருந்தார். அந்த சமயம் பார்த்து செந்தில்- சரவணன் இருவருமே கதிர் கடத்தியதாக சொன்ன பெண்ணை அழைத்துக் கொண்டு வந்தார்கள்.
இன்றைய எபிசோட்:
அந்த பெண், தன்னுடன் படிப்பவர்கள் தான் கடத்தி வைத்ததாக சொன்னவுடன் போலீஸ் கதிரை விட்டது. பாண்டியன் கோபத்தில் போலீசை திட்டி இருந்தார். இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டியன் தன்னுடைய மகனை, ராஜியின் அப்பா வீட்டிற்கு அழைத்து சென்று தான் விட்ட சவாலில் வெற்றி பெற்றதை சொல்லி பெருமையாக பேசி இருந்தார். அதோடு என் மகன் மீது எந்த தவறும் இல்லை, வாய்க்கு வந்தபடி எல்லாம் பேச தேவையில்லை என்றார். இதனால் ராஜி அப்பா, சித்தப்பாவால் எதுவுமே பேச முடியாமல் அமைதியாக இருந்தார்கள்.
சீரியல் ட்ராக்:
ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த ராஜி, உங்கள் மகன் தான் எங்களை கடத்தி வைத்து தேவையில்லாத வேலை செய்தான் என்றார். அதற்கு பின் தன்னுடைய மகனை பாண்டியன் வீட்டிற்கு அழைத்துப் போனார். அங்கே எல்லோருமே கதிரை விசாரித்து அக்கரையாக பேசி விசாரித்து இருந்தார்கள். பின் பாண்டியன் கடைக்கு போகணும் என்று சொன்னவுடன் செந்தில்- சரவணன் இருவரும் கதிர் உடன் இருக்கணும் என்கிறார்கள். அதற்கு மீனா, எல்லோரும் லீவு போட்டுவிடலாம் என்கிறார். இதனால் பாண்டியன் கோபமாக பார்க்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.