பழனி அண்ணன்கள் செய்த தில்லாலங்கடி வேலை, உண்மை அறிந்த பாண்டியன் குடும்பம் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

0
120
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ பழனியின் சின்ன அண்ணன், பழனிக்கு ஆண்மை இல்லை. அவனால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று பொய்யான ஒரு விஷயத்தை சொன்னவுடன் பெண் வீட்டிலும் நம்பி விட்டார்கள். பெண் வீட்டார் காரணம் வெளியே சொல்லாமல் கல்யாணம் நடக்காது என்று கிளம்பி இருந்தார்கள். இதனால் மொத்த குடும்பமே இடிந்து போனது. பழனியின் திருமணம் நின்று விட்டதால் பாண்டியன் குடும்பமே ரொம்ப எமோஷனலாக அழுது பேசி இருந்தார்கள்.

-விளம்பரம்-

அப்போது பழனியின் அண்ணன்கள், உனக்கு நாங்கள் பெண் பார்த்து வைத்திருக்கிறோம். இந்த பெண்ணின் பெயர் சுகன்யா. நல்ல பொண்ணு என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், பழனிக்கு இந்த திருமணத்தில் விருப்பமே இல்லை. பின் அப்பத்தா, பாண்டியன் சொன்ன காரணத்தினால் பழனியும் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டார். நேற்று எபிசோட்டில் பழனிக்கு நல்லபடியாக திருமணம் நடந்தது. பின் பழனி, பாண்டியன் குடும்பத்தை மேடைக்கு அழைத்தார். ஆனால், அவர்களை வரவிடாமல் பழனி அண்ணன்கள் தடுத்து விட்டார்கள். பிரச்சனை எதுவும் செய்ய வேண்டாம் என்று பாண்டியனும் ஓரமாக நின்று தன்னுடைய மச்சானின் கல்யாணத்தை பார்த்தார்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இதையெல்லாம் பார்த்து கோமதிக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. எல்லோரும் போல் வரிசையில் நின்று தன்னுடைய மச்சானுக்கு செயின் போட்டுவிட்டு பாண்டியன் குடும்பம் அங்கிருந்து சென்றது. இதையெல்லாம் பார்த்து பழனிக்கு ரொம்பவே வேதனையாக இருந்தது. பின் வீட்டிற்கு வந்த பாண்டியன் குடும்பம், பழனிக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். அந்த சமயம் பார்த்து பழனியும் அவருடைய அண்ணன்களும் வந்தார்கள். பழனியின் அண்ணன்கள் ரொம்ப கேவலமாக பாண்டியனை பேச, அவர் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

நேற்று எபிசோட்:

அதற்குப்பின் பழனியை தன்னுடைய வீட்டிற்க்கே அவருடைய அண்ணன்கள் அழைத்து சென்றார்கள். இதை பார்த்து கோமதி ரொம்ப எமோஷனலாக அழுதார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டியன் குடும்பத்தில் எல்லோருமே பழனியின் திருமணத்தில் நடந்ததை நினைத்து ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். எந்த காரணத்தினால் பெண் வீட்டில் வேண்டாம் என்று சொன்னார்கள்? எதனால் இப்படி செய்தார்கள்? என்று பாண்டியன் குடும்பம் புலம்பி கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் பழனி, பாண்டியன் குடும்பத்தை நினைத்து கவலையில் இருக்கிறார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

உடனே அவருடைய அண்ணன்கள், இனி நீ எங்கும் போகக் கூடாது. உனக்கு என்ன வேண்டும் என்றாலும் நாங்கள் செய்கிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால், பழனி அதை பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் சென்று விடுகிறார். அதற்குப்பின் மாரி, சுகன்யாவை பற்றி தன் மாமியாரிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவள் ரொம்ப வாயாடி. அவருடைய வாய்க்கு யாருமே நிக்க முடியாது. அந்த அளவிற்கு பேசுவாள். அதனால் தான் நானே அவளிடம் சில வருஷமாக பேசுவதே இல்லை என்று சொன்னதை கேட்டு அப்பத்தா ரொம்பவே கவலைப்படுகிறார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் கதிர்- செந்தில் இருவருமே பெண் வீட்டிற்கு சென்று நடந்ததை விசாரிக்கிறார்கள். அப்போது அவர்கள், பழனி அண்ணன்கள் சொன்ன விஷயத்தை கேட்டு பயங்கரமாக கோபப்படுகிறார்கள். பின் செந்தில், இதைப் பற்றி வீட்டில் சொன்னவுடன் மொத்த குடும்பமே ஷாக் ஆகிறது. கோபத்தில் கோமதி தன்னுடைய அண்ணன்களிடம் சண்டை போட போகிறார். உடனே பாண்டியன், தடுத்து நிறுத்தி அவன் வாழ்க்கையை சந்தோஷமாக தொடங்கட்டும். எதுவாக இருந்தாலும் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று எல்லோரையும் சமாதானம் செய்து அனுப்பி விடுகிறார். அதற்குப்பின் பழனி போன் செய்து தன்னுடைய மச்சான்களிடம் பேசுகிறார். அவர்களுமே உண்மையை சொல்லாமல் நார்மலாக பேசுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement