விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் மூன்று மருமகள்களுக்கும் தாலி பிரித்து கோர்க்கும் விழா நடந்தது. ஆனால், தங்கமயில் மட்டும் நகையை நினைத்து புலம்பி கொண்டு இருந்தார். பின் மாடியில் தங்கமயில், தன்னுடைய அப்பா- அம்மாவிடம் போலி நகை குறித்து பேசி இருந்தார்.
இதை எல்லாம் இன்னொரு பக்கம் நின்று இருந்த ராஜி- மீனா இருவருமே கேட்டு விட்டார்கள். பின் அவர்கள் இதை பற்றி தங்கமயிலிடம் விசாரிக்க, அவர் அப்பா- அம்மா ஏதோ சொல்லி சமாளிதார்கள். ஆனால், அவர்கள் ஏற்றுக் கொள்ளவே இல்லை.
கடைசியில் தங்கமயில், இதெல்லாம் கவரிங் நகை தான். 8 பவுன் தான் தங்கம். இதனால் தான் நான் பயப்படுகிறேன் என்று உண்மையை சொல்ல, மீனா- ராஜி இருவருமே அதிர்ச்சியில் உறைந்து நின்றார்கள்.
மேலும், தங்கமயில், எனக்கு பல வருடமாக கல்யாணம் ஆகவில்லை. அதனால் தான் பொய் சொல்லி திருமணம் செய்து வைத்தார்கள். இனிமேல் இந்த உண்மை எல்லாம் மறைத்து வைத்து பயந்து பயந்து வாழ முடியாது. நீங்கள் இதை மாமாவிடம் சொன்னாலும் எனக்கு பிரச்சினை இல்லை என்றார். உடனே மீனா- ராஜி இருவருமே நீங்கள் செய்தது தவறு. ஆனால், நாங்கள் யாரிடமும் சொல்ல மாட்டோம் என்றார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பின் நல்லபடியாக மூவருக்குமே தாலி பிரித்து கோர்க்கும் பங்க்ஷன் நடந்தது. நேற்று எபிசோட்டில் அப்பத்தா, ராஜி- கதிர் இருவரையுமே ஆசிர்வாதம் செய்தார். இதை எல்லாம் பார்த்து கோமதி ரொம்ப சந்தோஷப்பட்டார். ஆனால், பாண்டியன் எதுவுமே சொல்லவில்லை. உடனே கோமதி, தன்னுடைய மற்ற இரண்டு மகன்கள், மருமகளை ஆசீர்வாதம் வாங்க அழைத்து வந்தார். எல்லாரையும் அப்பத்தா ஆசீர்வாதம் செய்தார்.
நேற்று எபிசோட்:
அந்த சமயம் வந்த ராஜியின் சித்தப்பா, இதை எல்லாம் பார்த்து கோபப்பட்டார். உடனே அங்கிருந்து கோமதி, தன் மகன்கள், மருமகள்களை அழைத்து சென்று விட்டார். அதன் பின் அப்பத்தா மற்றும் இரண்டு மகன்களுக்கும் இடையே வாக்குவாதம் வந்தது. இன்னொரு பக்கம் குழலியின் பிரச்சனையை பற்றி பாண்டியன் கேட்க, தன்னை ரொம்ப கொடுமைப்படுத்துகிறார்கள் என்று குழலி கதறி அழுதார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் குழலி சொன்னதைக் கேட்டு பாண்டியன் வீட்டில் எல்லோருமே கோபப்படுகிறார்கள்.
இன்றைய எபிசோட்:
பின் பாண்டியன், பழனி, சரவணன் மூவருமே குழலியின் மாமியார் வீட்டுக்கு போகிறார்கள். அங்கு குழலியின் கணவர், மாமனார், மாமியார் எல்லோருமே அவர்களை நல்லபடியாக தான் விசாரிக்கிறார்கள். ஆனால், பாண்டியன் கோபப்பட்டு எதற்கு என் மகளை கொடுமைப்படுத்துகிறீர்கள் என்று பேசினார். பின் நடந்ததை குழலியின் கணவர் சொல்ல, பாண்டியனால் எதுவுமே பேச முடியவில்லை. குழலி தான் மொத்த குடும்பத்தையும் கொடுமைப்படுத்துகிறார் என்று தெரிந்ததும் பாண்டியன் ரொம்பவே வருத்தப்படுகிறார்.
சீரியல் ட்ராக்:
பின் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு வீட்டிற்கு வருகிறார் பாண்டியன். அங்கு பழனி நடந்த எல்லாத்தையும் சொல்ல எல்லோருமே ஷாக் ஆகிறார்கள். குழலி அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பின் எல்லோரும் குழலியிடம் கேள்வி கேட்க, அவர் அழுது புலம்பி அங்கிருந்து கிளம்பி விடுகிறார். பின் பாண்டியன், இந்த பிரச்சனையை பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.