அதிரடியாக கதிரை கைது செய்த போலீஸ், அதிர்ச்சியில் பாண்டியன் குடும்பம் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

0
153
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கதிர், சவாரியில் ஒரு பெண் மற்றும் அவர் ஆண் நண்பர்களை அழைத்து போனார். அந்த பெண்ணை அவர் நண்பர்கள் தவறாக கண்ணோட்டத்தில் பார்த்தார்கள். இன்னொரு பக்கம் பாண்டியன், தங்கமயிலுக்கு டீச்சர் வேலை ஏற்பாடு செய்து இருக்கிறார். இதை கேட்டு எல்லோரும் சந்தோசப்பட, தங்கமயில் மட்டும் பதறி போய் வேலைக்கு போகவில்லை என்று சொன்னார். ஆனால், எல்லோரும் தங்கமயிலை வேலைக்கு அனுப்புவதில் உறுதியாக இருந்தார்.

-விளம்பரம்-

மேலும், கதிர் வாடகைக்கு அழைத்து செல்லும் பெண்ணிடம் அவருடைய நண்பர்கள் தப்பாக பேசி இருந்தார்கள். இதையெல்லாம் பார்த்து அந்த பெண் ரொம்ப பயந்தார். பின் அந்த பெண், சும்மா டூர் என்று சொன்னார்கள். ஆனால், அவர்கள் நடந்து கொள்வது எனக்கு பயமாக இருக்கிறது என்று சொல்ல, கதிர் ஆறுதல் சொல்லி இருந்தார். இன்னொரு பக்கம் குழலி, மூன்று மருமகள்களையும் வேலை வாங்கிக்கொண்டு இருந்தார். இதை பார்த்து கோபத்தில் கோமதி, குழிலியை அறைந்து விட்டார். அவரும் வேறு வழியில்லாமல் தன் கணவருடன் வீட்டிற்கு சென்றார். இதையெல்லாம் பார்த்து மூன்று மருமகள்கள் ஷாக் ஆகி இருந்தார்கள்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

நேற்று எபிசோட்டில் கதிர், சவாரியில் வந்த அந்த பெண்ணிடம் அவர் ஆண் நண்பர்கள் தவறாக நடக்க பார்த்தார்கள். உடனே கதிர், ஏதோ காரணத்தை சொல்லி அவர்களை காரில் இருந்து இறக்கிவிட்டு அந்த பெண்ணை பத்திரமாக அவருடைய வீட்டில் விட்டு போனார். இன்னொரு பக்கம் சரவணன், தங்கமயிலை ஆசிரியர் வேலைக்காக பள்ளிக்கு அழைத்து சென்றார். போகும் வழியில் ஏதேதோ காரணத்தை தங்கமயில் சொல்லியும் சரவணன் விடவில்லை.

நேற்று எபிசோட்:

பின் பள்ளியில் தங்கமயிலை விசாரித்தார்கள். அப்போது சர்டிபிகேட் இல்லை என்று தங்கமயில் சொன்னதுக்கு, பாண்டியன் சொன்னதால் எனக்கு அதெல்லாம் தேவையில்லை என்று வேலையில் சேர்த்துக் கொண்டார்கள். இதனால் தங்கமயில் ரொம்பவே பயப்படுகிறார். பின் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கதிருக்கு போன் வந்தது. உடனே அவர், ராஜியை அழைத்துக் கொண்டு போனார். அங்கு ராஜியை ஏமாற்றிய கண்ணன் இருப்பதை பார்த்து அவர்கள் ஷாக் ஆனார்கள்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் போலீஸ் ஸ்டேஷனில் கண்ணனை பார்த்தவுடன் கோபத்தில் ராஜி அவரை அடிக்கிறார. போலீஸ் அவரை தடுத்து நிறுத்தி இருந்தார்கள். பின் போலீஸ் உண்மையை கேட்க, ராஜியை காதலித்த விஷயத்தை கண்ணன் சொன்னார். உடனே கதிர், உண்மையை மறைத்து பொய் சொல்கிறான். பின் விசாரணையில் கண்ணன் மொத்த நகையும் செலவு செய்துவிட்டதாக சொன்னார்கள். ராஜி ரொம்ப வருத்தப்படுகிறார். பின் கண்ணன் மீது புகார் கொடுத்துவிட்டு வீட்டில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று ராஜிவிடம் செல்கிறார் கதிர்.

சீரியல் ட்ராக்:

மறுநாள் காலையில் போலீஸ் பாண்டியன் வீட்டிற்கு வருகிறது. அப்போது அவர்கள், சவாரிக்கு வந்த பெண்ணை கதிர் கடத்தி விட்டான் என்று சொல்லி தரதரவென இழுத்துச் செல்கிறது. வீட்டில் உள்ள எல்லோருமே எடுத்து சொல்லியுமே போலீஸ் கேட்கவில்லை. பின் பாண்டியன் குடும்பம் போலீஸ் ஸ்டேஷனுக்கு போனார்கள். அப்போது கதிர், வாடகைக்கு வந்த பெண்ணை நான் வீட்டு தெரு முனையில் இறக்கி விட்டு வந்துவிட்டேன். அதற்குப்பின் என்ன நடந்தது என்று தெரியாது என்று சொல்கிறார். ஆனால், அதை போலீஸ், அந்த பெண்ணுடைய அப்பாவுமே கேட்கவில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement