விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சோசியல் மீடியா, டிவி என அனைத்திலும் கதிர் செய்த சாகசம் குறித்த செய்தி தான் வைரலாகி இருந்தது. இதை பார்த்து மொத்த குடும்பமே சந்தோஷப்பட்டு பேசிக் கொண்டிருந்தார்கள். கதிர் செய்த சாதனையை பெருமையாக நினைத்த ராஜி, தன்னுடைய அப்பாத்தாவிடம் சொல்ல, அவர் வீட்டு வாசலில் கத்திக் கொண்டிருந்தார். அந்த சமயம் வந்த ராஜி சித்தப்பா, வழக்கம் போல் பாண்டியன் குடும்பத்தை மோசமாக பேசி இருந்தார். அதற்கு ராஜி பதிலடி கொடுத்து வந்தார்.
பின் குழலி, கதிரை பார்த்து பயங்கர எமோஷனலாக பேசி இருந்தார். அந்த சமயம் பார்த்து தங்கமயிலின் அப்பா, அம்மாவும் வந்தார்கள். அவர்களை வேண்டும் என்று குழலி வம்பு இழுத்து இருந்தார். பின் குழலி, தன் தம்பிக்காக மட்டன் குழம்பு, இட்லியை எடுத்து வந்து பரிமாறி இருந்தார். உடனே தங்கமயில் அம்மா, நாட்டுக்கோழி குழம்பை தம்பிக்கு வை என்று சொன்னவுடன், கோழி எல்லாம் யாராவது தின்னுவாங்களா? என்று நக்கலாக குழலி பேச, அவர்களுடைய முகமே மாறி இருந்தது. இதனால் செந்தில், கோழிக்கறி குழம்பை வாங்கி சாப்பிட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
இதையெல்லாம் கவனித்த மீனா, செந்திலை பாராட்டி இருந்தார். இன்னொரு பக்கம் கதிர், கல்லூரிக்கு செல்வதாக சொல்ல, கோபத்தில் ராஜி, கோமதியிடம் சொன்னார். இதனால் இருவரும் கதிரை திட்டி இருந்தார்கள். பின் மீனா, வேலை செய்யும் இடத்திற்கு அவருடைய அம்மா வந்தார். அப்போது வீட்டில் சமைத்த சாப்பாட்டை தன்னுடைய அம்மாவிற்கு மீனா கொடுத்தார். இதை வீடியோ கால் மூலம் கோமதி இடமும் காண்பிக்க, அவர் ரொம்ப சந்தோசப்பட்டார்.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில், மீனா அம்மா பேசியதை கோமதி, வீட்டில் எல்லோரிடமும் சொல்லி சந்தோஷப்பட்டார். ஆனால், குழலி மட்டும் கோமதியை திட்டி இருந்தார். உடனே கோமதி, சொந்தத்துக்குள் கெத்து பார்க்கத் தேவையில்லை. நான் மீனாவின் அம்மாவை பார்க்க போகிறேன் என்று செந்திலை அழைத்துக் கொண்டு போனார். இன்னொரு பக்கம் தங்கமயில், சரவணனுக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு போனார். அப்போது அவர், வேலைக்கு போகவில்லை என்று ஏதேதோ காரணங்களை சொல்ல, சரவணன் சம்மதித்தார்.
இன்றைய எபிசோட்:
பின் இதை தங்கமயில் தன்னுடைய அம்மாவிடம் சொல்லி சந்தோசப்பட்டார். அதற்குப்பின் கதிர் சாப்பிட முடியாது என்று வீடு முழுவதும் ஓட, ராஜி துரத்தி இருந்தார். இதையெல்லாம் பார்த்து செந்தில், கோமதி கிண்டலடித்து பேசி இருந்தார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கதிரின் நிலைமையை நினைத்து அப்பத்தா ரொம்ப வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். அந்த சமயம் வந்த பழனி இடம் கதிரை பற்றி விசாரிக்கிறார்கள்.
சீரியல் ட்ராக்:
பின் கதிரை பார்க்க அப்பத்தா வெளியில் வந்து நின்று கூப்பிடுகிறார்கள். அப்போது வெளியே வந்த கோமதி, பேரனை பார்க்க உள்ளே வாருங்கள் என்று சொல்கிறார். எல்லோரும் அப்பத்தாவிதம் கெஞ்சுகிறார்கள். உள்ளே வந்தால் தேவையில்லாமல் பிரச்சனை வர வேண்டாம் என்று அப்பத்தா சொல்கிறார். ஆனாலும், ராஜி- கோமதி விடவில்லை. ஒருவழியாக அப்பத்தாவை வீட்டுக்குள் அழைத்து சென்று விடுகிறார்கள். இதனால் மொத்த குடும்பமும் சந்தோஷமாக இருக்கிறது. கதிர் தன்னுடைய அப்பாவை பார்த்து சந்தோஷப்பட்டு பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.