விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் ரூமிற்கு சென்ற தங்கமயில், என்னை மன்னித்து விடுங்கள் என்று பேசி இருந்தார். ஆனால், சரவணன் கோபத்தில் எதுவும் பேசாமல் தூங்கி விட்டார். அதற்குப்பின் மறுநாள் காலையில் எல்லோருமே கோயிலுக்கு தயாராகி கிளம்பி இருந்தார்கள். வீட்டில் சுகன்யா மட்டும்தான் தனியாக இருந்தார். பழனிக்கு ஃபோன் செய்த சுகன்யா, இந்த பேய் பங்களாவில் என்னால் எப்படி தனியாக இருக்க முடியும். என்னை ஏன் இப்படி கொடுமை படுத்துகிறீர்கள் என்று வழக்கம் போல் பழனியை திட்டிக் கொண்டிருந்தார். அவர் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார்.
பாண்டியன் கடையில் வியாபாரத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது வந்த மாப்பிள்ளை, அம்மா தேவையில்லாமல் உங்களிடம் நிறைய கேட்டுவிட்டார். எனக்கு அதில் எந்த உடன்பாடும் இல்லை. எனக்கு நான் நல்லா படித்திருக்கிறேன். நன்றாக சம்பாதிக்கிறேன். எதுவாக இருந்தாலும் என் மனைவிக்கு செய்கிறேன். கார் நானே வாங்கி தருகிறேன். அதை நீங்கள் கொடுத்து விடுங்கள் என்று ரொம்ப பெருந்தன்மையாக பேசி இருந்தார். இதைக் கேட்டு பாண்டியனும் அவருடைய அண்ணன்களும் ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். உடனே பாண்டியன், எங்கள் மகளுக்கு நாங்கள் செய்கிறோம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நீங்கள் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று சொன்னார். இன்னொரு பக்கம் கோமதி, அவருடைய மூன்று மருமகள்கள், மகள் உடன் கோவிலுக்கு செல்லும் ஊரிற்கு சென்று விட்டார்கள். பாண்டியனுக்கு போன் செய்த கோமதி ஊருக்கு வந்த விஷயத்தை சொன்னார். அப்போது பாண்டியன், மாப்பிள்ளை சொன்னதை சொன்னவுடன் கோமதிக்கு ரொம்ப சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் ரூமில் மூன்று மருமகள், அரசி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது மாப்பிள்ளை அரசிக்கு போன் செய்து பேசி இருந்தார். இன்னொரு பக்கம் வீட்டிற்கு வர சொல்லி சுகன்யா, பழனிக்கு போன் செய்து கண்டமேனிக்கு கத்தி இருந்தார். பழனியும் என்ன செய்வது என்று புரியாமல் அமைதியாக இருந்தார்.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் சுகன்யா, பழனிக்கு போன் மேல் போன் செய்து கொண்டிருந்தார். டார்ச்சல் தாங்க முடியாமல் பழனி வீட்டுக்கு வந்து விட்டார். அப்போது சுகன்யா, உங்கள் வீட்டிற்கு நான் வடித்துக் கொட்டணுமா? என்னால் வீட்டு வேலை செய்ய முடியாது என்று ரொம்ப மோசமாக பழனியை திட்டி இருந்தார். பின் பழனியிடம் தண்ணிர் எடுக்க சொல்லி குடத்தை கொடுத்தார். பின் காய்கறிகளை காய்கறிகளை கட் பண்ணுவது என்று வீட்டு வேலை எல்லாம் செய்ய சொன்னார். பழனி அழுது கொண்டு எதுவும் பேசாமல் செய்தார். இதையெல்லாம் வீட்டிற்கு வந்த சரவணன் பார்த்து விட்டார்.
சீரியல் ட்ராக்:
வீட்டில் யாரும் இல்லை என்று நினைத்துக் கொண்டு சுகன்யா மோசமாக பேசிக் கொண்டிருந்தார். சுகன்யாவின் நடவடிக்கையை பார்த்து சரவணனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்போது வெளிவந்த சுகன்யா, சரவணனை பார்த்து விட்டார். ஒன்னும் தெரியாது போல சுகன்யா நாடகமாடி இருந்தார். பின் மாடியில் பழனி-சரவணன் இருவருமே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது பழனி, கல்யாண நாளில் இருந்து இப்படித்தான் நடந்து கொண்டார். எனக்கு ஒண்ணுமே புரியவில்லை என்று தனக்கு நடந்த சோகமான விஷயத்தை சரவணன் இடம் சொல்லி வேதனைப்பட்டார். இன்னொரு பக்கம் மீனா-ராஜி- தங்கமயில் மூவருமே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒவ்வொரு கணவர்மார்களும் எப்படி எல்லாம் தங்களை மிஸ் செய்கிறார்கள் என்று போன் செய்து பேசி இருந்தார்கள்.
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கோவில் திருவிழாவில் நடன போட்டியில் வென்றால் பைக் பரிசாக கொடுக்கப்படும் என்று போர்டு வைக்கப்பட்டு இருக்கிறது. இதை பார்த்தவுடன் ராஜி, எப்படியாவது இந்த போட்டியில் கலந்து கொண்டு கதிருக்கு பைக்கை வாங்கி கொடுக்கணும் என்று நினைக்கிறார். பின் இதைப்பற்றி மீனா, தங்கமயில் இடம் சொல்கிறார் ராஜி. அதற்குப்பின் கோமதி இடம் ராஜி, நடனப் போட்டியை பற்றி பேசுகிறார். கோபத்தில் இருக்கும் கோமதி, சாமி கும்பிடு வந்த வேலையை பார்க்கலாம். தேவையில்லாத வேலையெல்லாம் செய்ய வேண்டாம் என்று கோபப்படுகிறார்.