விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் மீனாவை வேலை விட்டு தூக்க சக்திவேல் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் தன்னுடைய அம்மாவிற்கு போன் செய்ய தங்கமயில், ஒவ்வொரு நாளும் எனக்கு சித்திரவதையாக இருக்கிறது. சர்டிபிகேட் கேட்டு உங்கள் மாப்பிள்ளை தொந்தரவு செய்தார். நான் எதை கொடுப்பது, உண்மையை சொல்ல போகிறேன் என்று சொன்னவுடன் அவருடைய அம்மா தடுத்து விட்டார். இன்னொரு பக்கம் மீனா வேலை செய்து கொண்டிருக்கும் போது தண்ணீர் இணைப்பு வேண்டும் என்று சொல்லி நபர் ஒருவர் கடிதம் கொடுத்தார். ஆனால், அதில் பணம் இருக்கிறது.
அப்போது வந்து வருமான வரித்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக சொல்லி மீனா மீது குற்றச்சாட்டி இருந்தார்கள். மீனா எவ்வளவு எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை. பின் அந்த அலுவலகத்தில் இருக்கும் சில அதிகாரிகள் மீனாவிற்கு எதிராக புகார் கொடுத்தார்கள். அப்போது வந்து சக்திவேல், குமார் இருவருமே எங்களிடம் கூட பணம் வாங்கி லஞ்சம் வாங்கி தான் வேலை செய்தார். இவர் ரொம்ப மோசமான அதிகாரி என்றெல்லாம் ஒன்னுக்கு ரெண்டாக சொன்னார்கள். இதை அப்படியே வருமானத்தை அதிகாரிகள் நம்பி விட்டார்கள். அதற்குப்பின் டிவியில் னாவின் விவகாரம் வைரலாகி இருந்தது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அதை பார்த்த தங்கமயில், கோமதி அதிர்ச்சியாகி இருந்தார்கள். நேற்று எபிசோட்டில் அதிகாரிகள், மீனா தவறு செய்தார் என்று அவரை கைது செய்ய நினைத்தார்கள். அப்போது அலுவலகத்திற்கு வந்த பாண்டியன், செந்தில் இருவருமே மீனா மீது தவறில்லை என்று பேசி இருந்தார்கள். ஆனால், அந்த அதிகாரிகள் கேட்கவே இல்லை. மீனாவை கைது செய்ய சொன்னார்கள். உடனே மீனா, ஒரு நிமிடம் நான் சொல்வதை கேளுங்கள் என்று மொபைலில் ரெக்கார்ட் செய்ததை காண்பித்தார்.
நேற்று எபிசோட்:
அதில் மீனா மீது தவறு இல்லை என்பது நிரூபிக்கப்பட்டது. அதை பார்த்தவுடன் சக்திவேல்-குமார் இருவருமே ஷாக் ஆனார்கள். அதிகாரிகளுமே மீனா மீது பழி போட்ட நபரை திட்டி கைது செய்தார்கள். அதற்குப்பின் மீனா, சக்தி – குமாரை மிரட்டி வார்னிங் கொடுத்து அனுப்பி விட்டார். அதற்குப்பின் மீனா, குமார் என்னை காலையிலேயே மிரட்டி விட்டு சென்றார். அதோடு என்னுடைய அலுவலகத்திற்கு வெளியில் கும்பலாக நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். அதனால் தான் முன்னாடியே நான் மொபைலில் வீடியோ எடுத்தேன் என்று சொன்னவுடன் செந்தில்- பாண்டியன் இருவருமே மீனாவை பாராட்டி இருந்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் செந்தில்- கதிர் இருவருமே குமாரை பார்த்து அடி வெளுத்து வாங்குகிறார்கள். குமாரும் தன்னால் முடிந்தவரை தடுக்கிறார். இருந்தாலும் விடாமல் அடிக்கிறார்கள். பின் அங்கு உள்ளவர்கள் இருவரையும் தடுத்து விலக்கி விடுகிறார்கள். இன்னொரு பக்கம் டிவியில் மீனாவின் மீது எந்த தவறும் இல்லை என்று சொன்னதைக் கேட்டு பாண்டியன் குடும்பம் ரொம்ப சந்தோஷப்படுகிறது.
அதற்குப்பின் பாண்டியன், சக்திவேல்- முத்துவேலிடம் சண்டைக்கு போகிறார். அப்போது பாண்டியன், இது இவ்வளவு கேவலமான வேலை செய்விர்களா? உங்கள் வீட்டுப் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு நன்றாக தானே பார்த்துக் கொள்கிறோம் என்று ஆக்ரோஷமாக பேசுகிறார்.
சீரியல் ட்ராக்:
இதனால் கோபப்பட்ட முத்துவேல், குமாரை வீட்டிற்கு வர வைக்கிறார். அப்போது முத்துவேல், குமாரை அடித்து எதற்காக இந்த வேலையெல்லாம் செய்தாய்? என்று கேட்கிறார். அதற்கு சக்திவேல், நீங்கள் தானே மீனாவை வேலை விட்டு அனுப்பனும் என்று சொன்னீர்கள். அதனால் தான் இப்படி செய்தோம் என்கிறார். அதற்கு முத்துவேல், இப்படி எல்லாம் செய்து கேவலமாக மாற்றிக்கொள்ள சொன்னேனா, எனக்கு எப்படி செய்யணும் என்று தெரியும் உங்கள் வேலையை பாருங்கள் என்று திட்டி அனுப்பி விடுகிறார். பின் சத்திவேல், தன் மகனை திட்டி இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.