விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சரவணன், நீ இப்படி பொய் சொல்லிவிட்டு வேலைக்கு போவது சரியில்லை. எங்களை எல்லாம் ஏமாற்றுவாய் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை என்று பயங்கரமாக கோபப்பட்டார். தங்கமயில் என்ன சொல்வதென்றே புரியாமல் அழுது கொண்டே இருந்தார். பின் வீட்டில் சொல்ல வேண்டாம் என்று தங்கமயில் கெஞ்சியுமே சரவணன் கேட்கவில்லை அங்கிருந்து கிளம்பி விட்டார். இன்னொரு பக்கம் வீட்டிற்கு மீனா வந்தார். அப்போது பாண்டியன்- கோமதி இருவருமே சக்திவேல் கடை விஷயமாக பேசி இருந்தார்கள். அப்போது மீனா, சட்டப்படி என்ன செய்யணுமோ அதை தான் செய்தேன் என்று சொன்னார்.
அதற்குப்பின் மாப்பிள்ளை போன் செய்து அரசி இடம் பேசி இருந்தார். ஆனால், அரசி சரியாக பேசாமல் போனை வைத்து விட்டார். பின் மீனாவிடம் அரசியை பேச சொல்லி மாப்பிள்ளை கேட்டார். மீனாவும் அரசிக்கு எடுத்துச் சொல்லி புரிய வைத்தார். அதற்குப்பின் வீட்டில் எல்லோருமே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த சமயம் வந்த தங்கமயில், உண்மை தெரிந்து விட்டதோ? என்று ரொம்பவே பார்த்து இருந்தார். ஆனால், சரவணன் வீட்டில் எதையுமே சொல்லவில்லை. கோமதி, ஏன் இவ்வளவு தாமதமாக வருகிறாய் என்று திட்டி இருந்தார். சரவணன் எதுவும் சொல்லாமல் தங்கமயிலை முறைத்துக் கொண்டே இருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் சரவணன், கடையில் என்ன நடந்தது என்று சொல்லு என்றார். தங்க மயில், ரொம்ப பயப்பட்டார். கடைசியில் சரவணன், தங்கமயில் லீவு கேட்டு விட்டார். அவளையும் கோயிலுக்கு அழைக்க செல்லுங்கள் என்று சொன்னார். அப்போது தான் தங்கமயில் பெருமூச்சு விட்டார். எல்லோருமே கோயிலுக்கு கிளம்புவதை பற்றி பேசி இருந்தார்கள். அதற்குப்பின் தங்கமயில் வெளியே என்ன நடக்குமோ? என்ற பயத்தில் இருந்தார். அப்போது வந்த மீனா, உங்களுக்கும் மாமாவிற்கும் பிரச்சனையா? ஏன் ரெண்டு பேருமே பதட்டமாக இருக்கிறீர்கள் என்று சொன்னவுடன் கேட்டார். ஆனால், தங்கமயில் ஏதேதோ சொல்லிவிட்டு சென்றார்.
நேற்று எபிசோட்:
ரூமிற்கு சென்ற தங்கமயில், என்னை மன்னித்து விடுங்கள் என்று பேசி இருந்தார். ஆனால், சரவணன் கோபத்தில் எதுவும் பேசாமல் தூங்கி விட்டார். அதற்குப்பின் மறுநாள் காலையில் எல்லோருமே கோயிலுக்கு தயாராகி கிளம்பி இருந்தார்கள். வீட்டில் சுகன்யா மட்டும்தான் தனியாக இருந்தார். பழனிக்கு ஃபோன் செய்த சுகன்யா, இந்த பேய் பங்களாவில் என்னால் எப்படி தனியாக இருக்க முடியும். என்னை ஏன் இப்படி கொடுமை படுத்துகிறீர்கள் என்று வழக்கம் போல் பழனியை திட்டிக் கொண்டிருந்தார். அவர் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார். அதற்குப் பின் கடைக்கு வந்த சரவணன், தன்னுடைய தந்தையிடம் தங்க மயிலை பற்றி உண்மையை சொல்லிவிடலாம் என்று நினைத்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டியன் கடையில் வியாபாரத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது வந்த மாப்பிள்ளை, அம்மா தேவையில்லாமல் உங்களிடம் நிறைய கேட்டுவிட்டார். எனக்கு அதில் எந்த உடன்பாடும் இல்லை. எனக்கு நான் நல்லா படித்திருக்கிறேன். நன்றாக சம்பாதிக்கிறேன். எதுவாக இருந்தாலும் என் மனைவிக்கு செய்கிறேன். கார் நானே வாங்கி தருகிறேன். அதை நீங்கள் கொடுத்து விடுங்கள் என்று ரொம்ப பெருந்தன்மையாக பேசுகிறார். இதைக் கேட்டு பாண்டியனும் அவருடைய அண்ணன்களும் ரொம்ப சந்தோஷப்படுகிறார்கள். உடனே பாண்டியன், எங்கள் மகளுக்கு நாங்கள் செய்கிறோம்.
சீரியல் ட்ராக்:
நீங்கள் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் கோமதி, அவருடைய மூன்று மருமகள்கள், மகள் உடன் கோவிலுக்கு செல்லும் ஊரிற்கு சென்று விட்டார்கள். அங்கு அவர்களுக்காக பாண்டியன் விழா ஏற்பாடுகளையும் செய்து வைத்திருக்கிறார். பாண்டியனுக்கு போன் செய்த கோமதி ஊருக்கு வந்த விஷயத்தை சொல்கிறார். அப்போது பாண்டியன், மாப்பிள்ளை சொன்னதை சொன்னவுடன் கோமதிக்கு ரொம்ப சந்தோஷப்படுகிறார். அதற்குப்பின் ரூமில் மூன்று மருமகள், அரசி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது மாப்பிள்ளை அரசிக்கு போன் செய்து பேசி இருந்தார். இன்னொரு பக்கம் வீட்டிற்கு வர சொல்லி சுகன்யா, பழனிக்கு போன் செய்து கண்டமேனிக்கு கத்துகிறார். பழனியும் என்ன செய்வது என்று புரியாமல் அமைதியாக இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.