மண்ணை விட்டு மறைந்தாலும் மனதை விட்டு மறையாத சித்ரா – பெண் ரசிகைகள் போட்டுள்ள டாட்டூவை பாருங்க.

0
1077
chitra
- Advertisement -

பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களும் பல்வேறு பிரபலங்களும் சித்ராவின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். விஐய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ளது. அந்த வகையில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்றுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் எத்தனை ஜோடிகள் நடித்து வந்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜோடி என்றால் கதிர்- முல்லை ஜோடிதான். இதில் கதிராக நடிகர் குமரனும், முல்லையாக நடிகை சித்ராவும் நடித்து வந்தனர்.

-விளம்பரம்-

இதில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து முழுமையாக பல இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சித்ரா.இப்படி ஒரு நிலையில் நடிகை சித்ரா ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரத்தில் அவரது கணவர் ஹேம்நாத், தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சித்ரா இறந்து விட்டதால்,இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அவருக்கு பதில் முல்லை கதாபத்திரத்தில் யார் நடிக்கப்போகிறார்கள் என்று மிகப்பெரிய கேள்வி எழுந்தது.

இதையும் பாருங்க : மாலத்தீவு போனதும் பிகினி போட்டாலாம் இல்லன்னு சொன்னாங்க – இப்போ டிடி பதிவிட்ட புகைப்படத்தை பாருங்க.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லைக்கு பதிலாக, பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை காவ்யா புதிய முல்லையாக நடித்து வருகிறார். என்னதான் பாண்டியன் ஸ்டோர்ஸ்ஸில் புதிய முல்லையாக காவியா வந்தாலும் பழைய முறையான சித்ராவை ரசிகர்கள் இண்ணமும் மிஸ் செய்துதான் வருகிறார்கள்.

சித்ரா இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் ரசிகர்கள் மனதில் இருந்து தான் வருகிறார். இப்படி ஒரு நிலையில் சித்ராவின் பெண் ரசிகைகள் ஒருவர் சித்ரா கையில் இருந்த டாட்டூவை போல தன்னுடைய கையிலும் டாட்டூ போட்டுள்ளார். நடிகை சித்ரா, நடிகையாகும் முன்னர் Vj வாக தான் இருந்தார். அதனால் தான் தனது கையில் மைக் டாட்டூ ஒன்றை குத்தி இருந்தார். ஆனால், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் போது அந்த டாட்டூவை மேக்கப் போட்டு மறைத்துவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement