எந்த ஊர்ல சிசெரியன் பண்ணவங்க இப்படி இருப்பாங்க – கேலிக்கு உள்ளான பாண்டியன் ஸ்டோர்ஸ் லாஜிக்.

0
1589
- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் காட்சிகளை நெட்டிசன்கள் கலாய்த்து வரும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் வகுத்து வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், லாவண்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-

அதோடு இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது. அதனால் இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து ஒளிபரப்பி வருகிறார்கள். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா, மூர்த்தியிடம் சண்டையிட்டு தன்னுடைய மாமனாரின் வீட்டிற்கு சென்று விடுகிறார்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்:

பிறகு ஐஸ்வர்யா, கண்ணனும் மூர்த்தியிடம் சண்டை போட்டு விட்டு வெளியே வந்து விடுகிறார்கள். கதிர், மூர்த்தி மட்டும் ஒன்றாக இருக்கிறார்கள். பல பிரச்சனைகளுக்கு பின் கண்ணன்-ஐஸ்வர்யா தங்களுடைய வீட்டிற்கே வந்து விடுகிறார்கள். ஆனால், இவர்கள் வாங்கி வைத்த கடன் விவகாரம் யாருக்கும் தெரியாது. அதோடு கண்ணன் வேலை செய்யும் இடத்தில் லஞ்சம் வாங்குகிறான். இன்னொரு பக்கம் கதிர் ஹோட்டல் நன்றாக செல்வதால் ரத்தினம் கோபப்படுகிறார். இதனால் கதிரிடம் சண்டை போடுகிறார். பின் கதிரை பழிவாங்க நினைத்து ரத்தினம் இருசக்கர வண்டியை கதிரின் மேல் மோத பார்க்கிறார்.

சீரியலின் கதை:

ஆனால், கதிர் விலக அந்த வண்டி முல்லையின் வயிற்றில் மோதி முல்லை கீழே விழுந்து அவருக்கு பிரசவ வலி ஏற்படுகிறது. பின் அவரை மருத்துவமனையில் சேர்த்த பிறகு ஏழு மாதத்திலேயே அறுவை சிகிச்சை செய்து குழந்தை எடுக்க வேண்டும் மருத்துவர்கள் கூறிவிடுகிறார்கள். சிகிச்சைக்கு பிறகு கதிர், முல்லைக்கு பெண் குழந்தை பிறக்கிறது. கதிர் தன்னுடைய மனைவி முல்லைக்கு தேவையான அனைத்தையும் செய்து நன்றாக பார்த்துக் கொண்டு வருகிறார். ஆக மொத்தம் இந்த வாரம் முழுவதுமே ஹாஸ்பிடலிலேயே எபிசோடுகளை காண்பித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

கிண்டலுக்குள்ளான காட்சிகள்:

இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வரும் சில காட்சிகளை தான் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். அதாவது, இந்த வாரம் எபிசோட்டில் ஒரு காட்சியில் முல்லை புடவையில் காதில் ஜிமிக்கி, கழுத்தில் நகைகளோடும் மருத்துவமனையில் இருப்பதை காண்பித்து இருக்கிறார்கள். இதை பார்த்த ரசிகர்கள், எப்படி ஆபரேஷன் செய்த ஒருவர் புடவையில் இருக்க முடியும்? அதுவும் கழுத்து காதில் நகையோடு இருக்கிறாரே? குறிப்பாக தலையில் அடிபட்டதற்கான எந்த அடையாளமே இல்லை? என்று கேட்டு இருக்கிறார்கள்.

கிண்டல் செய்யும் ரசிகர்கள்:

இன்னொரு காட்சியில் முல்லை நைட்டி அணிந்திருக்கிறார். அதுவும் ஒரே எபிசோட்டில் இரண்டு முறை நைட்டி மாற்றி இருக்கிறார். அதுபோல கதிர் முல்லைக்கு சாப்பாடு ஊட்டுகிறார், பின் தலையும் சீவுகிறார், ஒரு முறை அவருக்கு மருந்து மாத்திரை கொடுத்து கொடுக்கிறார். இப்படி மூன்று முறை கதிர் முல்லைக்கு வேலை செய்யும் போது மூன்று முறை சட்டையை மாற்றி இருக்கிறார். எப்படி ஒரே நேரத்தில் மூன்று முறை சட்டை மாற்றுகிறார்கள்? என்னதான்டா நடக்குது? சீரியலை ஒளிபரப்பதற்காக அவசர அவசரமாக எடுத்து இப்படி எல்லாம் செய்வீர்களா? ஒரு வரைமுறை வேண்டாமா? என்றெல்லாம் கிண்டல் செய்து வருகிறார்கள்.

Advertisement