நான் தான் Breakup செய்தேன் – காதலனை பிரிந்த காரணம் குறித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.

0
228
- Advertisement -

இந்த விஷயத்தால் தான் பிரேக் அப் செய்தேன் என்று பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை லாவண்யா கூறியிருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் வகுத்த சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் சீரியல் மையமாக கொண்டது.

-விளம்பரம்-

இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், லாவண்யா, குமரன் தங்கராஜன், சரவணன், தீபிகா என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். அதோடு இந்த சீரியல் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி இருந்தது. மேலும், இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து முடியும் வரை விறுவிறுப்புடன் சென்று இருந்து இருக்கிறது. சமீபத்தில் தான் முடிவடைந்தது. எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் அண்ணன் தம்பிகள் ஒன்றாகவே இருக்க வேண்டும்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்:

மேலும், கூட்டுக்குடும்பமாக இருக்க வேண்டும் என்ற கான்செப்ட்டை மையமாக வைத்து தான் இந்த தொடரை ஒளிபரப்பி இருந்தார்கள். மேலும், இந்த தொடரில் முல்லை கதாபாத்திரத்தை யாரும் மறக்க மாட்டார்கள். முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் வி.ஜே சித்ரா. இவருக்காக தான் இந்த சீரியலை நிறைய பேர் பார்க்க ஆரம்பித்தார்கள். இவர் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பிரபலங்கள் ரசிகர்கள் என பலருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

லாவண்யா குறித்த தகவல்:

அதற்குப் பிறகு முல்லை கதாபாத்திரத்தில் காவியா என்பவர் நடித்திருந்தார். அவரும் திரைப்பட வாய்ப்புகள் வந்ததால் சீரியலை விட்டு விலகி இருந்தார். அதற்குப் பிறகு நடிகை லாவண்யா முல்லை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த சிப்பிக்குள் முத்து என்ற தொடரில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த சீரியல் ஒரு தெலுங்கு சீரியல்லின் ரீமேக் ஆகும். இந்த சீரியல் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.

-விளம்பரம்-

லாவண்யா நடித்த சீரியல்:

இந்த தொடரில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் லாவண்யா. இவர் திருப்பூரை சேர்ந்தவர். இவர் மாடலிங் மூலம் தான் மீடியாவிற்குள் நுழைந்தார். அதன் பின் தான் சீரியலில் நடித்து வருகிறார். அதிலும் இவரை பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கதாபாத்திரத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இதற்குப் பிறகு இவர் சில படங்களில் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகை லாவண்யா பேட்டி:

இந்த நிலையில் சமீபத்தில் நடிகை லாவண்யா பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் தன்னுடைய காதல் பிரேக் அப் குறித்து கூறியிருந்தது, நான் வங்கி ஒன்றில் பணிபுரிந்து இருந்தேன். அப்போது நான் செய்த அனைத்து விஷயங்களும் என்னுடைய காதலனுக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால், நான் மாடலிங் துறையில் நுழைந்தது அவருக்கு பிடிக்கவில்லை. அதற்காக நான் ஒன்றும் செய்ய முடியாது. எனக்கு மாடலிங் என்றால் ரொம்ப பிடிக்கும். என்னுடைய வாழ்க்கையில் நான் அடுத்த கட்டத்திற்கு போக என்னுடைய காதல் தடையாக இருந்தால் நான் பிரேக் அப் செய்து விட்டேன் என்று கூறியிருந்தார்.

Advertisement