பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இப்போ இவருக்கு கர்ப்பமா- இது வச்சே 100 எபிசோட் ஓடிடுவாங்களே.

0
931
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் வகுத்து வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், லாவண்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது. அதனால் இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் சீரியலுக்கு இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் என இந்தியாவில் 8 மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு இந்த சீரியல் பிரபலமாக திகழ்கிறது. இந்த தொடரில் தொடரில் முல்லை என்ற வேடத்தில் முதலில் நடித்து வந்தவர் விஜே சித்ரா.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்:

இவர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அவருக்கு பதிலாக காவ்யா நடித்து இருந்தார். இப்போது தற்போது புதிய முல்லையாக லாவண்யா என்ட்ரி கொடுத்து புதிய இவர் முத்து தொடரில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதுதான் வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் தருணத்தில் நீ வீட்டிற்கு வந்ததே போதும் என்று சொல்கிறார்கள் மூர்த்தி.

இந்த உண்மையை வீட்டில் மற்றவர்களுக்கும் தெரிய வைக்க கண்ணன் வீட்டில் அப்பாவை வரவைக்கிறார். அவர் வந்த உடனே தன்னுடைய வேலையை ஆரம்பித்து விடுகிறார். பின் ஒருவரை மாற்றி ஒருவர் திட்டி மூர்த்தி மீனாவிடம் உன்னுடைய அப்பா அம்மாவை வெளியே போக சொல் என்று சொல்கிறார். உடனே கோபம் வந்து ஜனார்த்தன் இது என் வீடு, என்னை வெளியே போ சொல்லறதுக்கு நீங்கள் யாரு? நீங்கள் வெளியே போங்கள் என்று வீட்டை விட்டு துரத்தி விட்ட ஜனார்த்தனன்.

-விளம்பரம்-

இப்போது கடையையும் இழுத்து மூடிவிட்டார்.இந்த நிலையில் இந்த ஏற்கனவே வீடும், மளிகை கடையும் போன நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ்ன் ஹோட்டலை அரசங்கக்கா அதிகாரிகள் வந்த கடையை இழுத்து மூடி சீல் வைத்து விட்டனர். இதனை வேறு ஒரு நபர் திட்டமிட்டு செய்துள்ளார்.

கர்ப்பமான முல்லை :

இந்த சிரியலில் திருமணமான போதிலிருந்து குழந்தைகாக ஏங்கி வருபவர் முல்லை. ஏற்கனவே கதிரும் முலையும் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அதற்காக மருத்துவம் செய்தும் எந்த பயனும் இல்லாத நிலையில் தற்போது முல்லை கர்ப்பமாகி விட்டார் என்ற செய்தி வெளியாகி வைரலாகி வருகிறது. பல நாட்களாக குழந்தை இல்லாத முல்லை தற்போது கர்ப்பமாகி இருப்பதுதான் இந்த சீரியலில் புதிய ட்விஸ்ட் என்று கூறிவருகின்றனர் பாண்டியன் ஸ்ட்ரோர்ஸ் ரசிகர்கள்.

Advertisement