இவர்கள் இருவரின் மீது தான் சேனல் கடும் கோபத்திலேயே இருக்கிறது – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பஞ்சாயத்து குறித்து சொன்ன பிரபலம்.

0
1488
- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ல் மற்ற நடிகர்கள் நடிக்காததற்கான காரணம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் வகுத்து வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், லாவண்யா, குமரன் தங்கராஜன், சரவணன், தீபிகா என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். அதோடு இந்த சீரியல் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று இருந்து இருக்கிறது. இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிறைவடையும் முன்னரே இரண்டாம் சீசனுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பது தான் இரண்டாவது பாகத்தின் டைட்டில். இதற்கு முன்பு அண்ணன் தம்பிகள் கதையை மையமாக வைத்து எடுத்திருந்தார்கள். தற்போது இரண்டாவது சீசனில் அப்பா- மகன்களுக்கு இடையேயான உறவை மையமாக வைத்து கதையை எடுக்கிறார்கள். மேலும், முதல் சீசனில் அண்ணனாக நடித்த ஸ்டாலின் தற்போது அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

ஸ்டாலினுக்கு மனைவியாக நிரோஷா நடிக்கிறார். மேலும் இவர்களுடைய மகன்களாக விஜே கதிர், வசந்த், ஆகாஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். தற்போது இந்த இரண்டாவது சீசன் உடைய ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. இந்த மாத இறுதியிலேயே இந்த இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இரண்டாவது சீசனில் ஸ்டாலினை தவிர மற்ற எந்த நடிகர்களும் இல்லை என்பது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பலரும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஹிட் கொடுத்ததே அதில் நடிக்கும் நடிகர்கள் தான். தற்போது இரண்டாவது சீசனில் யாரும் இல்லை என்பது கஷ்டமாக இருக்கிறது. ஏன் முதல் சீசனில் வந்தவர்கள் இரண்டாவது சீசன் இல்லை என்றெல்லாம் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

சீரியல் நெருக்கமானவர்கள் அளித்த பேட்டி:

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தொடர்புடையவர்கள் கூறியிருப்பது, இந்த சீரியல் முழுக்க முழுக்க ஹிட் ஆனதற்கு காரணம் டீம் ஒர்க் தான். சீரியலில் நடித்த ஒவ்வொரு ஆர்டிஸ்ட்டுக்கும் வெற்றியில் பங்கு இருக்கிறது. மறைந்த சித்ராவை இந்த நேரத்தில் சொல்லணும். அவர்களால் இந்த சீரியலுக்கும், சீரியலால் அவர்களுக்கும் நிறைய பேர் கிடைத்து இருக்கிறது. இப்படி இருக்கும்போது அடுத்த சீரியலை சேனல் தொடங்க நினைத்து இருக்கிறது. ஆனால், சீரியல் தங்களால் தான் ஓடியது என்று நினைத்துக் கொண்டு சில ஆர்ட்டிஸ்டிகள் தான் பிரச்சனை செய்தார்கள். அதுமட்டுமில்லாமல் சினிமா, வெப் சீரிஸ் வாய்ப்புகள் வருவதாக சொல்லி மீண்டும் சீரியலில் நடிக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

பிற நடிகர்கள் நடிக்காத காரணம்:

உண்மையிலேயே அப்படி எல்லாம் யாரும் பிசியாக இல்லை. சம்பளத்தை கூட்ட சொல்லி தான் இவர்கள் இப்படி எல்லாம் செய்திருக்கிறார்கள். நேரடியாக அதை சொல்லி கேட்டிருந்தால் கூட பரவாயில்லை. இந்த மாதிரி செய்தது சேனலுக்கு கடுப்பாகிவிட்டது. அந்த கடுப்பில் தான் சேனல், ஒரு கட்டத்தில் வருகிற ஆர்டிஸ்ட்டுகளை வைத்து தொடங்கலாம், வராதவர்களை விட்டுவிடலாம் என்று சொல்லி சீசன் 2வை ஆரம்பித்தார்கள். பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற பெயருக்கு பதில் பாண்டியன் இல்லம் என்ற பெயரை ஆரம்பத்தில் மாற்ற நினைத்தார்கள். ஆனால், சேனல் பிராண்டாக நினைத்ததாலேயே பழைய டைட்டில் இருக்கட்டும் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.

இரண்டாவது சீசனில் நடிக்கும் பிரபலங்கள்:

பாண்டியன் குடும்பத்தில் இருந்தவர்களில் வெங்கட் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கிழக்கு வாசல் தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார். கடைசி தம்பியாக வரும் சரவணன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று விட்டார். ஹேமாவும், அவரது அப்பாவாக நடித்த ரவியும் இரண்டாவது சீசனில் இருக்கிறார்கள். ஸ்டாலின் மனைவியாக நடித்த சுஜிதா, கதிர் இவர்கள் இருவரும் இரண்டாவது சீசனுக்கு நடிக்க மறுத்து விட்டார்கள். இவர்கள் இருவரின் மீது தான் சேனல் கடும் கோபத்திலேயே இருக்கிறது என்று சொல்லலாம். அதேபோல் நடிகர் அஜய் ரத்தினம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். ஸ்டாலின் குடும்பத்திற்கு தரப்படும் முக்கியத்துவம் இவரது குடும்பத்துக்கும் இருப்பது போல கதையை கொண்டு செல்கிறார்கள். முதல் சீசனை போல இரண்டாவது சீசனும் ஹிட் அடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கணும் என்று கூறி இருக்கிறார்கள்.

Advertisement