தன் கண்ணு முன்னே சொந்த தாங்க நோய்வாய்பட்டு இறந்ததை பார்த்து – விஜய் குறித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷீலா.

0
548
Vijay
- Advertisement -

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் போலவே இந்தி மொழியில் பாண்டியா ஸ்டோர்ஸ் என்ற அதே பெயரில் இந்த சீரியல் இந்தியில் ரீ -மேக் சீரியலில் அண்ணண் தம்பிகளாக நடித்து வரும் சகோதரரகளுக்கு அம்மாவாக நடித்து வரும் நடிகை ஷீலா வேறு யாரும் இல்லை பிரபல நடிகையும் விஜய்யின் தாயுமான நடிகை ஷோபாவின் சகோதரி தான். அதுமட்டுமல்லாமல் இவருடைய மகன் தான் நடிகர் விக்ராந்த் என்பதும் குறிப்பிடத்தக்கத்து. இவர் விஜய்க்கு அத்தை முறையாகும். இப்படி இருக்கையில் தான் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்த ஷீலா நடிகர் விஜய் பற்றிய சுவாரசியமான விஷியங்களை பற்றி பேசியுள்ளார்.

-விளம்பரம்-

விஜய் பிறக்கும் போது நான் 10 வது படித்துக்கொண்டிருந்தேன். அவரை நாங்கள் அனைவரும் தான் வளர்த்தோம். எந்த பிரச்னையும் செய்யாத சமத்து பையனாகத்தான் விஜய் இருந்தார். அப்போது அவருடன் என்னுடைய பெரிய பையன் சஞ்சய் இருப்பார். அவர் தற்போது படங்களில் பிசியாக நடித்து வருவதினால் அவரை பார்த்து பல நாட்கள் ஆகிறது, பேசமுடியவில்லை என்ற வருத்தம் இருக்கிறது. ஆனால் அவர் பெரிய இடத்தில இருக்கிறார் என்று மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

- Advertisement -

விஜய்யின் தங்கை இறக்கும் போது அனைவரும் ஒன்றாகத்தான் இருந்தோம், அந்த காலத்தில் இப்போது உள்ளது போல மருத்துவம் கிடையாது போராடி பார்த்தார்கள் ஆனால் முடியவில்லை. விஜய் அதற்கு பிறகு மிகவும் சோகமாகிவிட்டார். அப்போது விஜய்க்கும் சிறிய வயது தான். இந்நிலையில் கூடவே கண்முன்னே இருந்த தன்னுடைய தங்கை நோய்வாய்ப்பட்டு இறந்து போனத அவரை மிகவும் பாதித்தது இருந்தது. அதன் பின்னர் தான் விஜய் மிகவும் அமைதியாக மாறிவிட்டார். ஆனால் தொடங்கத்தில் இருந்தே விஜய் அமைதியாகத்தான் இருப்பார்.

அப்போதெல்லாம் நாங்கள் அக்காவின் வீட்டு பக்கத்தில் தான் இருந்தோம் அங்கே பல படப்பிடிப்புகள் நடக்கும், அங்கேதான் நடிகர் விஜயகாந்தின் பல படங்களின் படப்பிடிப்பு நடந்தது. அப்போது விஜய் பாலலோக் உயர்நிலை பள்ளியில் தான் படித்து வந்தார். விஜய் பள்ளிக்கு சென்று வந்த பின்னர் வீட்டிற்கு பின்னர் இருக்கும் இடத்திற்கு சென்று அங்கிருந்து படப்பிடிப்பை பார்த்து ரசித்து கொண்டிருப்போம். தற்போது மிகப்பெரிய உயரத்திற்கு சென்று விட்டார் என்பது பெருமையாக இருக்கிறது என்றார்.

-விளம்பரம்-

மேலும் அப்போது விஜய் பற்றி விமர்சனங்கள் வரும் போது எங்களுக்கு கடினமாக இருந்தாலும் அவர்களே பின்னர் அழைத்து விஜய்யை பாராட்டினார்கள். தொடக்கத்தில் விஜய் நடிக்க வருவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் படித்துக்கொண்டிருந்தார் அவர் பின்னர் திடீரென சினிமாவுக்கு வந்துவிட்டார். ஆனால் அதற்கு பிறகு அவர் படத்தில் நடிப்பதையும், நடனமாடுவதை பார்த்து நம்முடைய விஜய்யா இது என்ற அளவிற்கு நடனமாடினார். அதற்கும் அவர் நடனப்பயிற்சி பள்ளி செல்லக்கூட இல்லை.

பொதுவாகவே எங்கள் வீட்டில் யாரும் அவர்களுடைய சினிமா வழக்கை பற்றி பேசிக்கொள்ளவே மாட்டோம். நான் என்ன சீரியலில் நடிக்கிறேன் என்று என்னுடைய குடும்பத்திற்க்கே தெரியாது. அந்த அளவிற்கு அதிகமான அந்த விஷியாயத்தை எடுக்க மாட்டோம். ஆனால் பகவதி படத்தில் ஜெய் நடிக்கும் போது சினிமாவில் ஜெய் வருவார் என்று எதிர்பார்க்கவில்லை. நானும் ஒரு முறையாவது விஜய்யோடு நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. நேரம் காலம் எல்லாம் சரியாக வந்தால் நடிப்பேன் என்று கூறினார் ஷீலா.

Advertisement