அடுத்தடுத்து கர்ப்பமான மருமகள்கள் – பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை வச்சி செய்த KPY சாம்பியன்ஸ்.

0
406
pandian
- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை Kpy நிகழ்ச்சியில் வச்சி செய்து இருக்கும் ப்ரோமோ தற்போது வைரலாக பரவி வருகிறது. .விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் வகுத்து வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், லாவண்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. மேலும், இந்த தொடர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி என பழமொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அதோடு தமிழில் கடந்த சில மாதங்களாகவே சீரியல் கொஞ்சம் அரைத்த மாவையே அரைத்து வருகிறது. இந்த தொடரில் சமீப காலமாக கர்ப்பமாக இருப்பதை மட்டும் தான் காண்பித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்த தொடரில் ஐஸ்வர்யா மற்றும் முல்லை இருவரும் கர்பமாக இருப்பதாக காண்பிக்கப்பட்டது. ஏற்கனவே பல மருத்துவர்கள் முல்லைக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று கூறிய நிலையில் அவர் கர்ப்பமாக இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதற்கெல்லாம் தாண்டி சமீபத்தில் இந்த தொடரில் மூத்த அன்னியான தனம் கர்ப்பமாக இருப்பது போல காண்பிக்கப்பட்டு இருந்தது.

இப்படி ஒரு குடும்பத்தில் அடுத்தடுத்து பெண்கள் கர்ப்பமாகி வருவது போல காண்பிக்கப்பட்டு வரும் இந்த தொடரை “என்ன கன்டென்ட் கிடைக்காமல் இப்படி ஒவ்வொருவரா கற்பமாக்குறீங்களா? இது பாண்டியன் ஸ்டோர்ஸ் இல்ல வந்தியன் ஸ்டோர்ஸ், கர்பம் ஸ்டோர்ஸ் என்று கலாய்த்து பதிவிட்டு வந்தனர். இபப்டி ஒரு நிலையில் இந்த தொடரை Kpy நிகழ்ச்சியிலும் பங்கமாக கலாய்த்து உள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள் பலர் நீங்களே கலாய்ச்சிகிட்டா எப்படி என்று கமண்ட் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் தொடர்களின் ஒன்றாக இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த சில வாரமாகவே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறாமல் இருந்து வருகிறது. இந்த தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த காவ்யா இந்த தொடரில் இருந்து வெளியேறினார். சமீபத்தில் தான் இந்த தொடரில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த சாய் காயத்ரியும் வெளியேறினார்.

இதுகுறித்து விளக்கமளித்த அவர் ‘ பாண்டியன் ஸ்டோர் தொடரில் இருந்து நான் விலகி விட்டது உண்மைதான் இதற்கு மேலும் ஐஸ்வர்யா ராய் பாத்திரத்தில் நடிக்க எனக்கு உடன்பாடு இல்லை இனிவரும் கதை எனக்கும் என்னுடைய தவிலுக்கும் ஏற்படுவதாக இல்லை இந்த பயணத்தில் என்னை ஆதரித்த உங்கள் அனைவருக்கும் நன்றி மேலும் என்னுடைய முடிவை மதித்து ஏற்றுக் கொண்ட விஜய் டிவிக்கும் நன்றி’ என்று கூறி இருந்தார்.

Advertisement