அதுக்கு எனக்கு விருப்பமில்லை – பாண்டியன் ஸ்டோர்ஸ்ஸில் இருந்து விலகிய காரணம் குறித்து பேசிய ஐஸ்வர்யா (வைஷாலி தணிகா)

0
1870
vaishali
- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகிய காரணம் குறித்து வைசாலி தனிகா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. ஒரு சாதாரண குடும்பக் கதையை மையமாகக் கொண்ட தொடர். இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார்,காவ்யா , குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதை. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும், பாராட்டும் பெற்று வருகிறது.

-விளம்பரம்-

மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து வருகிறார்கள். அந்த அளவிற்கு பாப்புலர் ஆன சீரியல்.அதே போல இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் ரங்கநாதன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த சீரியலில் அனைவருக்கும் ஜோடி இருக்கிறார்கள். ஆனால், கடைக்குட்டி இருந்து வரும் கண்ணனுக்கு எந்த ஜோடியும் இல்லாமல் இருந்து வந்தது.

இதையும் பாருங்க : சொன்னதை போல ஜனநாதனின் மருத்துவ பில் முழுவதையும் கட்டிய நடிகர். மனுஷன்யா.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இந்த சீரியலில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஐஸ்வர்யா கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகை வைஷாலி தனிகா என்ட்ரி கொடுத்தார். ஆனால், திடீரென்று இவர் இந்த சீரியலில் இருந்து விளக்கப்பட்டு இவருக்கு பதிலாக தீபிகா என்பவர் மாற்றப்பட்டுள்ளார். இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள வைஷாலி, ’எல்லாரும் ஏன் பாண்டியன் ஸ்டோர் சீரியலை விட்டு விலகிட்டீங்கன்னு கேக்குறாங்க. உண்மையிலேயே அதுக்கான காரணம் தெரியல. என் கிட்ட யாரும் எதுவும் சொல்லல. இதுக்கு மேல நான் அந்த காரணத்தை தெரிஞ்சுக்கவும் விரும்பல. ரொம்ப சின்னதா இருந்தாலும் ஐஸ்வர்யா கதாப்பாத்திரத்துக்கு நீங்க கொடுத்த ஆதரவுக்கு நன்றி.

இப்போ நான் நடிச்சிட்டு இருக்க கோகுலத்தில் சீதை மற்றும் மகராசி ஆகிய சீரியல்களுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுங்க. சீக்கிரம் என்ன நீங்க விஜய் டிவி-ல பாப்பீங்க’ இவர் ஏற்கனவே ராஜா ராணி சீரியல் முதல் பாகத்தில் நடித்து இருந்தார். ஆனால், அந்த சீரியலில் இருந்தும் திடீரென விலகினார். தற்போது ‘கோகுலத்தில் சீதை’ தொடரில் மீனாட்சி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement