‘விஜய் ஆண்டனி ஒரு தீர்க்கதரிசி’ பிச்சைக்காரன் 1ன் போது 500,1000 – பிச்சைக்காரன் 2வந்ததும் 2000 – வைரலாகும் மீம்ஸ்.

0
1635
- Advertisement -

பிச்சைக்காரன் 2 படம் வெளியான நிலையில் 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்ப பெற இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக இருந்து நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அந்த வகையில் இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்திருந்த படம் பிச்சைக்காரன்.

-விளம்பரம்-

இந்த படம் வசூல் ரீதியாக பெரிய அளவு வெற்றியடைந்தது. பின் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனியே இயக்கிருக்கிறார். நேற்று இந்த படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. மேலும், இந்த படம் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் வெளியாகியிருக்கிறது. பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் பிச்சைக்காரன் 2 படம் வெளியான நிலையில் 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்ப பெற இருக்கும் தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

- Advertisement -

அதாவது, பிச்சைக்காரன் படத்தின் முதல் பாகத்தில் 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தடை செய்தால் ஊழலை ஒழிக்கலாம் என்று சொல்லி இருப்பார்கள். அதன் பிறகு நவம்பர் மாதமே பிரதமர் மோடி 500 ரூபாய் நோட்டுகளுக்கு இந்தியா முழுவதும் தடை செய்திருந்தார். இதனால் மக்கள் பெரிதளவு பாதிக்கப்பட்டு இருந்தார்கள். வங்கி வாசல்களில் மக்கள் கூட்டமும் அலைமோதி இருந்தது. இதனை அடுத்து தற்போது வெளியான பிச்சைக்காரன் 2 படத்தில் 2000 ரூபாய் நோட்டுகள் எண்ணப்படுவதை குறியீடாக காட்டுவார்கள்.

இந்த நிலையில் தற்போது 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்ப வாங்குவதாக அறிவித்திருக்கிறது. காரணம், கருப்பு பணப்புழக்கம் அதிகமாக இருப்பதால் இதை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பாக ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றும் வெளியிட்டு இருக்கிறது. அதில், 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்திருக்கிறது. 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இனி விநியோகக் கூடாது.

-விளம்பரம்-

இந்த நடைமுறை உடனடியாக அமுலுக்கு வர வேண்டும். பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை இந்த மாதம் 23ஆம் தேதி வங்கிகளில் கொடுத்து கணக்குகளில் வரவு வைத்துக் கொள்ளலாம் அல்லது வேற ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்.மேலும், 2000 ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்களில் கிடைக்கவில்லை. கட்டுப்பாடு காரணமாக அவற்றை வங்கிகளில் விநியோகிப்பதை குறைத்துக் கொள்ள முயற்சி செய்வதே காரணம் என்று கூறப்படுகிறது.

மக்கள் புழக்கத்தில் 2000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பில் 10. 80சதவீதம் தான் இருக்கிறது. மற்றது பெரும் பகுதி கருப்பு பணமாக பதுக்கி வைத்திருக்கிறார்கள். இவை வங்கிக்கு கணக்குக்கே வரவில்லை .அவற்றை வங்கி கொண்டு வருவதற்காக தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இப்படி பிச்சைக்காரன் 2 படம் ரிலீஸ் ஆன உடன் 2000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை செய்யப்பட்டு இருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பொதுவாக, சூர்யா படத்தில் வரும் சம்பவங்கள் தான் நிஜ வாழ்க்கையில் நடைபெறும் என்று ரசிகர்கள் கூறி மீம்ஸ் போட்டு இருந்தார்கள். ஆனால், தற்போது விஜய் ஆண்டனி படத்தில் வரும் காட்சிகளும் நிஜ வாழ்க்கையில் நிகழ்ந்து வருவது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், விஜய் ஆண்டனி ஒரு தீர்க்கதரிசி என்று நெட்டிசன்கள் பலர் மீம்களை பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement