இன்று சமூக வலைதளத்தில் பெரும் வைரலாக பேசப்பட்டு வருவது பொள்ளாச்சி பாலியல் வீடியோ தான். பொள்ளாச்சி பகுதியில் 250க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கும், அதைத் தொடர்ந்து மிரட்டல்களுக்கும் ஆளாக்கப்பட்டு வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது.
பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவன் தலைமையிலான கும்பல் தான் பாலியல் வக்கிரங்களையும், கொடூரங்களையும் அரங்கேற்றி உள்ளது என்று செய்திகள் வெளியானது. திருநாவுக்கரசு உள்ளிட்ட நால்வரை காவல்துறைகைது செய்துள்ளது.
இதையும் படியுங்க : 1000 பெண்களை பாலியல் பாலாத்காரம் செய்த பொள்ளாச்சி நபர்கள்.! வெளியான வாக்குமூல வீடியோ.!
இவர்கள் மட்டுமே இந்தக் கொடூரங்களை அரங்கேற்றியிருக்க முடியாது என்றும், இதயத்தை பதைபதைக்கச் செய்யும் இந்த பாலியல் குற்றங்களின் பின்னணியில் உள்ளவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதுடன், கடுமையான தண்டனையையும் பெற்றுத் தர வேண்டும் என்றும் பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தற்போது கூகுளிலும் தீயாக பரவி வருகிறது. மேலும், இந்த வீடியோவை கூகுளில் அதிகம் பேர் தேடப்பட்டு தற்போது ட்ரெண்டிங்கில் இரண்டாம் இடத்திலும் உள்ளது தான் தற்போது மிகவும் பரபரப்பான செய்தி.