தமிழில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெட்ஜ். மும்பை மாடல் அழகியான இவர், முகமூடி படத்திற்கு பின்னர் தமிழில் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை.
இருப்பினும் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். அதிலும் தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் மகேஷ் பாபு இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘மகரிஷி’ படத்திலும் நடித்துள்ளார்.
இதையும் படியுங்க : ஒழுங்காக ஆடை அணிய சொன்ன ரசிகர்.! மோசமான புகைப்படத்தை பதிவிட்டு பதில் கொடுத்த பேட்ட நடிகை.!
இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் ஹோட்டலுக்கு திரும்பிய பூஜா ஹெட்ஜ் மூக்கு முட்ட குடித்துவிட்டு போலீசில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியானது.
ஆனால், இந்த தகவலை மறுத்து பேசியுள்ள பூஜா ஹெட்ஜ்ஜின் மேலாளர் கூறுகையில், பூஜா ஹெட்ஜ் குடித்து விட்டு போலீசில் மாட்டினார் என்று பரவும் செய்தி மிகவும் ஆதாரமற்றது. அவரது காரை அவரது ஓட்டுநர் தான் ஓட்டினார். அதுவும் நிகழ்ச்சி முடிந்து அவர் நேராக ஹோட்டலுக்கு சென்றுவிட்டார் என்று கூறியுள்ளார்.