அப்போ இது தமிழ் பாட்டு இல்லையா? இன்ஸ்டாவில் வைரலாகும் கிளியே கிளியே குறித்து பூர்ணிமா.

0
501
- Advertisement -

இணையத்தில் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டிருக்கும் கிளியை கிளியே பாடல் குறித்து பூர்ணிமா பாக்யராஜ் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் பயங்கர ட்ரெண்டிங் ஆகி கொண்டிருக்கும் பாடல் கிளியே கிளியே. 1983 ஆம் ஆண்டு வெளியான ஆ ராத்திரி என்ற படத்தில் இந்த பாடல் இடம் பெற்றிருக்கிறது. இந்த படத்தில் பூர்ணிமா பாக்கியராஜ், ரோஹினி, மம்முட்டி என பலர் நடித்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த படம் உண்மையான சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இதை இயக்குனர் ஜோஷி இயக்கியிருந்தார். இந்த கிளியே கிளியே பாடலின் போது பேபி அஞ்சுவை பூர்ணிமா பாக்யராஜிம், ரோகினியும் போட்டி போட்டுக் கொண்டு விளையாட்டு காட்டி கொஞ்சுவார்கள். இந்த பாடலுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த பாடலை பாடி ஜானகி தான் பாடியிருந்தார்.

- Advertisement -

கிளியே கிளியே பாடல்:

மேலும், 40 ஆண்டுகள் கழித்து இந்த பாடல் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக நடிகை பூர்ணிமா பாக்யராஜ் பேட்டியில், இத்தனை வருடம் கழித்து இந்த பாடல் இப்போது கொண்டாடப்படுவதை நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது. ஆ ராத்திரி படம் உண்மையாக நடந்த சம்பவம். இந்த படத்தில் ஒரு அசம்பாவிதம் நடக்கும். அதற்கு முன்னாடி குடும்பத்தோட பிக்னிக் போகும்போது வரக்கூடிய ஒரு சந்தோஷமான பாடல் தான் கிளியே கிளியே.

பூர்ணிமா பாக்யராஜ் அளித்த பேட்டி:

இந்த பாடலில் பெரிதாக டான்ஸ் மூவ்மெண்ட் எல்லாம் கிடையாது. அதனால் இரண்டு நாளில் கிளியே கிளியே பாட்டை எடுத்து முடித்து விட்டார்கள். அப்பவே ஷூட்டிங்கில் இந்த பாட்டை ஜாலியாக பாடி கொண்டிருப்போம். இந்த பாட்டுக்கு டான்ஸ் ஆடணும்னு சொன்னப்போ மம்முட்டி சார் மறுத்துவிட்டார். அவர் எப்போதுமே இப்படித்தான். அவருக்காக இந்த பாட்டை மான்டேஜ்லயே எடுத்தாங்க. படம் ரிலீஸ் ஆனதும் பெரிய சக்சஸ் ஆனது.

-விளம்பரம்-

பாடல் குறித்து சொன்னது:

கிளியே கிளியே பாட்டும் செம ஹிட். எல்லா இடத்திலும் இந்த பாட்டு தான் ஒலித்து கொண்டிருந்தது. இப்போது 40 வருடத்திற்கு பிறகும் ட்ரெண்டிங் ஆகும் என்று எதிர்பார்க்கவே இல்லை. அம்மா உங்க பாட்டு ட்ரெண்டிங்கில் இருக்கு என்று என்னுடைய பிள்ளைகள் ஆச்சரியப்பட்டு சொல்றாங்க. அது எப்படி நடக்குது என்று தெரியவில்லை. நான் நடிக்கும் படங்களில் எல்லாமே நல்ல பாடல்களாக தான் அமைந்திருக்கிறது.

சோசியல் மீடியா குறித்து சொன்னது:

அப்படித்தான் இந்த பாட்டும் அமைந்தது. ராஜா சாரோட இனிமையான இசையில் ஜானகி மேடம் அற்புதமாக பாடியிருந்தார். இப்போ இருக்கிற மாதிரி சோசியல் மீடியாவில் அப்போது இருந்திருந்தால் கிளியே கிளியே இன்னும் பெரிய ரீச் ஆகி இருக்கும். எப்படியோ இப்போ தோண்டி எடுத்து விட்டார்கள். அதில் எனக்கு பெரிய சந்தோஷம்தான் என்று கூறியிருந்தார்.

Advertisement