பிரபல மாஸ் நடிகரின் 50வது படத்தில் வில்லனாக நடிக்கும் தேவா. யார் படத்தில் தெரியுமா ?

0
643
- Advertisement -

தனுஷின் ஐம்பதாவது படத்தில் இசையமைப்பாளர் தேவா நடிக்க மறுத்திருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் மிக பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தனுஷ். இவர் சினிமா உலகில் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், தயாரிப்பாளர், என பல துறைகளில் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார்.

-விளம்பரம்-

சமீப காலமாக இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த படம் திருச்சிற்றம்பலம். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனை அடுத்து இவர் நானே வருவேன், மாறன் போன்ற படங்களில் நடித்து இருந்தார். இந்த படங்கள் எல்லாம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. மேலும், இவர் பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

- Advertisement -

தனுஷ் திரைப்பயணம்:

இதனை அடுத்து சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாக இருந்த படம் வாத்தி. இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகி இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. அது மட்டும் இல்லாமல் இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

தனுஷின் ஐம்பதாவது படம் :

இதனை தொடர்ந்து தற்போது தனுஷ் அவர்கள் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படம் 1930 காலத்தில் இருந்த மதராஸ் மாகாணத்தை மையமாக வைத்து கதை. தற்போது கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. பின் நடிகர் தனுஷின் ஐம்பதாவது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவே ஏற்கனவே போஸ்டர் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

படம் குறித்த தகவல்:

அதோடு தனுஷின் ஐம்பதாவது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். இந்த படத்திற்கு ராயன் என்று டைட்டில் வைத்திருக்கிறார். இந்த படத்தினுடைய பூஜை சத்தமே இல்லாமல் ஈசிஆரில் நடைபெற்று இருக்கிறது. இந்த படம் வட சென்னையை மையப்படுத்தி எடுப்பதாகவும், பழிவாங்கும் கதையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க இருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்க இசையமைப்பாளர் தேவா மறுத்து இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

தேவா நடிக்க மறுக்க காரணம்:

அதாவது, இந்த படம் வடசென்னை சார்ந்த படம் என்பதால் இசையமைப்பாளர் தேவா வில்லனாக நடிக்க வைக்க தனுஷ் அவரிடம் பேசி இருக்கிறார். ஆனால் தேவா, எனக்கு வசனங்களை மனப்பாடம் செய்ய கடினமாக இருக்கும். இதனால் பல டேக்குகள் எடுக்கலாம். இதனால் இது மற்ற நடிகர்களை பாதிக்கும். நீங்கள் வேறு ஒரு நடிகரை நடிக்க வையுங்கள். என்னால் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Advertisement