’80s நடிகர்கள் வைத்த ரீ யூனியன்’ – என்னை ஏன் அழைக்கவில்லை, நான் என்ன மோசமான நடிகரா. பிரபல நடிகர் வேதனை. (ராதிகா தான் காரணமா ? )

0
1245
radhika
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகைச் சேர்ந்த நடிகர், நடிகையர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து வருடம் வருடம் ஒரு ரீயூனியன் நிகழ்ச்சியை நடத்துவார்கள். ஓரிடத்தில் சந்தித்து பழைய நினைவுகளை கொண்டு வரும் நிகழ்ச்சி தான் ரீயூனியன். தற்போது வரை அதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் ரியூனியன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடந்தது. அதுவும் தெலுங்கு மேக ஸ்டார் சிரஞ்சீவியின் வீட்டில் நடந்து இருந்தது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி நடிகர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டு இருந்தார்கள். ரீயூனியன் நிகழ்ச்சி என்றால் பலரும் யோசிப்பார்கள்? அது ஒன்னும் இல்லைங்க, ரீயூனியன் என்று பார்த்தால் 80 கால கட்டங்களில் சினிமா துறையில் கொடிகட்டி பறந்த நடிகர், நடிகைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து கொண்டாடும் விழா.

-விளம்பரம்-

சினிமா உலகம் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து வந்ததற்கு காரணம் 80 களில் தோன்றிய நடிகர், நடிகைகள் தான். அப்போதுதான் சினிமா உலகின் மிகப் பெரிய மெகா ஸ்டார்கள் உருவாக்கி இருந்தார்கள்.அதுமட்டும் இல்லாமல் சினிமா மீதான ஈர்ப்பும் அதிகமாக இருந்தது. சொல்லப்போனால், 80ஸ் காலம் தான் தென்னிந்திய சினிமா உலகின் பொற்காலம் என்று சொல்லலாம். தற்போது உள்ள சினிமா உலகில் பல விஷயங்கள் மாறி இருந்தாலும் 80 காலகட்டங்களில் இருந்த நடிகர்-நடிகைகள் போல இருக்க மாட்டார்கள். இவர்கள் அப்போது நடித்திருந்தாலும் தற்போது வெள்ளித்திரை, சின்னத்திரை என்று எல்லா திரைகளிலும் ஜொலித்து கொண்டு இருக்கிறார்கள்.

இதையும் பாருங்க : சட்டம் சரியா இருந்திருந்தா சீமான் இந்நேரம் இருந்திருக்க வேண்டிய இடம் ஜெயில்தான் – காங்கிரஸ் எம்.பி. கடும் விமர்சனம்.

- Advertisement -

80ஸ் ரீ யூனியன் :

அதில் பல பேர் நடிகர்களாக மட்டும் இல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பல துறைகளில் பணி புரிந்து வருகிறார்கள். மேலும், இந்த 80ஸ் ரீயூனியன் நிகழ்ச்சியில் சிரஞ்சீவி, மோகன்லால், நாகார்ஜுனா, பாக்யராஜ், வெங்கடேஷ், ஜாக்கி ஷெஃராப், ரமேஷ் அரவிந்த், ரகுமான், பிரபு, பாக்கியராஜ், சரத்குமார், ராதிகா, குஷ்பு, ஜெயராம், நாகர்ஜுனா, நதியா, ரேவதி,சுஹாசினி, அம்பிகா, அமலா, சோபனா உள்ளிட்ட பல நடிகர்கள் கலந்து கொண்டு இருந்தார்கள். மேலும், அவர்கள் வருடம் ஒரே நிற ஆடையில் இருப்பார்கள். அந்த வகையில் இந்த வருடம் கருப்பு மற்றும் தங்க நிறத்திலான ஆடைகளை அணிந்து இருந்தார்கள்.

விழா பற்றிய தகவல்:

இதைத் தொடர்ந்து விழாவில் நடிகர், நடிகைகள் அனைவரும் பல்வேறு விளையாட்டுகளை விளையாடி சந்தோஷமாக கொண்டாடி இருந்தார்கள். மேலும், இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ராம் சரண் கலந்து கொண்டு இருந்தார். அதுமட்டும் இல்லாமல் இந்த விழாவின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கேலி, கிண்டல், நகைச்சுவை, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என இருந்தது.

-விளம்பரம்-

நடிகர் பிரதாப் போத்தன் திரைப்பயணம்:

பழைய நண்பர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தால் கலாட்டாவுக்கு பஞ்சமா என்ன! இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் நடிகரும் ராதிகாவின் முன்னாள் கணவருமான பிரதாப் போத்தன் கலந்து கொள்ளவில்லை. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் எழுதிய “என் இனிய பொன் நிலாவே”,“நெஞ்சில் ஒரு முள்” பாடல்கள் எல்லாம் இன்று உள்ள இளைஞர்கள் கூட ரசிக்கும் அளவிற்கு இருக்கிறது.

நிகழ்ச்சிக்கு பிரதாப் போகாத காரணம்:

அதோடு இவர் நாளைய இயக்குனர் என்ற ஒரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்து இருக்கிறார். இப்படிப்பட்ட புகழ் வாய்ந்த நடிகர் பிரதாப் போத்தன் இந்த நிகழ்ச்சிக்கு செல்ல வில்லை. இந்நிலையில் இது குறித்து சமூகத்தில் அவர் பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். அதில் அவர், நான் ஒரு கெட்ட நடிகர் என்பதால் தான் என்னை அவர்கள் அழைக்கவில்லை என்று மன வேதனையுடன் கூறியிருந்தார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், இவருக்கு அழைப்புவிடுக்காத காரணம் ராதிகா தான் என்றும் கமன்ட் போட்டு வருகின்றனர்.

Advertisement