வாடகை தாய் மூலம் பெற்ற இரட்டை குழந்தைகள்- சரியான நேரத்தில் உதவிய ஹ்ரித்திக் ரோஷன். ப்ரீத்தி ஜிந்தா நெகிழ்ச்சி.

0
549
PreethiZinda
- Advertisement -

சரியான நேரத்தில் ரித்திக் ரோஷன் உதிவியதற்கு நன்றி கூறி ப்ரீத்தி ஜிந்தா பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. பாலிவுட் சினிமாவின் 90ஸ் கால கட்டத்தில் இந்தி ரசிகர்களின் கனவு கன்னிகளில் ஒருவராக விளங்கி வந்தவர் நடிகை ப்ரீத்தி ஜிந்தா. இவர்1998 ஆம் ஆண்டு வெளியான ‘தில் சே’ படத்தின் மூலம் தான் நடிகையாக அறிமுகமானார். இந்த திரைப்படம் தமிழில் உயிரே என்ற தலைப்பில் வெளியாகி தமிழிலும் மிக பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பாலிவுட்டில் ஷாருக் கான், சல்மான் கான், அக்ஷய் குமார் என்று பல முன்னணி நடிகர்களுடனும் சேர்ந்து ப்ரீத்தி ஜிந்தா நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், பாலிவுட் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேல் ப்ரீத்தி ஜிந்தா நடித்து வந்தாலும் இதுவரை இவர் 50 படங்களில் கூட நடிக்கவில்லை. ஏன்னா, இவர் அந்த அளவிற்கு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். பின் ப்ரீத்தி ஜிந்தா கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிநாட்டை சேர்ந்த Gene Goodenough என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னும் இவர் தொடர்ந்து படங்களில் கவுரவ வேடங்களில் நடித்து வந்தார் .மேலும், சமீப காலமாக சினிமாவில் இருந்து ப்ரீத்தி ஜிந்தா கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொண்டார்.

- Advertisement -

ப்ரீத்தி ஜிந்தா பற்றிய தகவல்:

அதே போல இவர் சினிமாவில் இருந்து தற்காலிகமாக ஒய்வு பெற்றிருந்தாலும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் நிறுவனராக இருந்து வருகிறார். இந்நிலையில் ப்ரீத்தி ஜிந்தா வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்று உள்ளார். 46 வயதான இவர் surrogate மூலம் இரட்டை குழந்தைக்கு தாயாகி இருக்கிறார். surrogate என்றால் வேறு ஒன்றும் இல்லை வாடகை தாய் மூலம் குழந்தை பெறுவது தான். ஏற்கனவே பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி கடந்த ஆண்டு தன் இரண்டாம் குழந்தையை வாடகை தாய் மூலம் பெற்றெடுத்தார்.

ப்ரீத்தி ஜிந்தாவுக்கு இரட்டை குழந்தை:

அதேபோல் பிரியங்கா சோப்ராவும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் தற்போது ப்ரீத்தி ஜிந்தாவும் சேர்ந்து இருக்கிறார். மேலும், நடிகை பிரீத்தி ஜிந்தாவுக்கு அமெரிக்காவில் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இதனால் ஐபிஎல் அணி வீரர்கள் ஏலத்தில் கூட ப்ரீத்தி ஜிந்தா கலந்து கொள்ள முடியவில்லை. மேலும், குழந்தை பிறந்த பிறகு முதல் முறையாக ப்ரீத்தி ஜிந்தா அமெரிக்காவில் இருந்து தன்னுடைய இரட்டை குழந்தைகளை அழைத்துக்கொண்டு இந்தியா வந்துள்ளார். அமெரிக்காவில் இருந்து ப்ரீத்தி ஜிந்தா விமானத்தில் இந்தியா வந்தபோது அவருடன் அவரது சகோதரரும் உடன் இருந்தார்.

-விளம்பரம்-

ப்ரீத்தி ஜிந்தாவுக்கு உதவிய ரித்திக்:

அதோடு விமானத்தில் அமெரிக்காவிலிருந்து வரும் போது அதிக நேரம் பயணிக்க வேண்டியதாக இருந்தது. இந்த சூழ்நிலையில் விமான பயணத்தில் நடிகர் ரித்திக் ரோஷனும் வந்திருக்கிறார். அப்போது ப்ரீத்தி ஜிந்தாவுக்கு குழந்தைகள் இரண்டையும் வைத்து சமாளிப்பதற்கு மிகவும் சிரமமாக இருந்தது. உடனே ரித்திக் ரோஷன் தலையிட்டு குழந்தைகளை கவனித்துக் கொள்ள உதவினார். இந்நிலையில் ப்ரீத்தி ஜிந்தா சமூக வலைத்தளத்தில் ரித்திக் ரோஷனுக்கு நன்றி தெரிவித்து பதிவு போட்டு உள்ளார். அதில் அவர், ரித்திக் ரோஷன் குழந்தைகளை கவனித்துக் கொள்வதில் அற்புதமான தந்தை என்பதை நிரூபித்தார். அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ரித்திக் ரோஷனுக்கு நன்றி சொன்ன ப்ரீத்தி ஜிந்தா:

உங்களது வாழ்க்கையில் பலர் வருவார்கள், போவார்கள். ஆனால், உண்மையான நண்பர்கள் தான் உங்களது இதயத்தில் நிலைத்து நிற்பார்கள். எனது குழந்தைகளை நீண்ட தூர விமான பயணத்தில் கவனித்துக் கொண்டதற்காக ரித்திக் ரோஷனுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறி ரித்திக் ரோஷனுடன் எடுத்துக்கொண்ட செல்பி ஒன்றையும் பகிர்ந்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ரித்திக் ரோஷனின் பிறந்தநாளை ஒட்டி ப்ரீத்தி ஜிந்தா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருந்தார். மேலும், ரித்திக் ரோஷனும் பிரீத்தி ஜிந்தாவும் சேர்ந்து மூன்று படங்களில் நடித்து இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement